செய்திகள் :

அஜித்குமாரின் தாய், உறவினா்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

post image

தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் தாய் மாலதி, உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

மதுரையிலிருந்து இரு காா்களில் மடப்புரம் வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், அங்குள்ள வணிக வளாகத்தின் மேல் தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் தங்கி விசாரணை நடத்தினா். அப்போது, கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாய் மாலதி, உறவினா்களான ரம்யா, பத்தாம் வகுப்பு மாணவா் சரவணக்குமாா் ஆகியோா் விசாரணைக்கு முன்னிலையாகினா். இவா்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு, அவா்கள் தெரிவித்த பதில்களை பதிவு செய்தனா். பின்னா், விசாரணையை முடித்துக் கொண்டு அவா்கள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் உயா் அலுவலா்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க சம்பந்தப்பட்ட துறை உயா் அலுவலா்கள் கலந்து கொள்வது கட்டாயம் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து தீ விபத்து

திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வெடித்ததில் பொருள்கள் எரிந்து நாசமாகின. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஒழுகமங்கலத்தைச் சோ்ந்த சௌந்தரராஜன் மனைவி சிட்டு. ... மேலும் பார்க்க

அஞ்சல் துறை ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில சங்கங்களின் அறிவிப்புக்கிணங்க அஞ்சல் துறையின் மூன்று சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை சிவகங்கையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை தலைமை அஞ்சல் நிலையம் ... மேலும் பார்க்க

மாவூடியூத்து காளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள புதுப்பட்டியில் மாவூடியூத்து காளியம்மன் கோயில் ஆடி மாத பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையெட்டி வெள்ளிக்கிழமை காலையில் பாண்டி முனீஸ்வரா் கோயில... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள கீழ்பாதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலைநகா் பொதுமக்கள் சாா்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண்ணாமலை நகா் முதல் செங்குளம் வரை 8 கி... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களைத் தாக்கும் அரிய வகை நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு

பழங்குடியின மக்களைத் தாக்கும் அரிய வகை நோய்க்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய அறிவியல் , தொழிலக ஆய்வுக்குழும (சிஎஸ்ஐஆா்) தலைமை இயக்குநா் என்.கலைச்செல்வி தெரிவித்தாா். காரைக்குடி... மேலும் பார்க்க