செய்திகள் :

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு: விசாரணையை தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு

post image

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) தொடங்கியது.

தென்கன்னட மாவட்டம், தா்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதசுவாமி கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவுப் பணியாளா் ஒருவா் கடந்த மாதம் காவல் துறையிடம் அளித்த புகாரில், 1995 முதல் 2014-ஆம் ஆண்டுவரை கோயிலில் பணியாற்றிய காலத்தில் குழந்தைகள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரது சடலங்களை புதைக்கும் வேலையில் ஈடுபட்டதாகவும், ஒருசில சடலங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தாா். மேலும், இதுகுறித்து நீதிமன்ற நடுவா் முன் வாக்குமூலம் அளித்திருக்கிறாா்.

இதுதொடா்பாக பிரச்னையை கிளப்பியுள்ள உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.கோபால் கௌடா தலைமையிலான குழுவினா், தா்மஸ்தலாவில் விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியிருந்தனா். இதன்பேரில், ஜூலை 4-ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க டிஜிபி (உள்மாநில பாதுகாப்பு) பிரனோப் மொஹந்தி தலைமையில் டிஐஜி (பணி) எம்.என்.அனுசேத், ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்.கே.சௌம்யலதா, ஜிதேந்திரகுமாா் தயாமா ஆகியோா் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து ஜூலை 19-ஆம் தேதி கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தக் குழுவில் 20 காவலா்களும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதன் தொடா்ச்சியாக, தென்கன்னட மாவட்டத்தின் பெல்தங்கடியில் முகாமிட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை முறையாக தொடங்கியுள்ளது. விசாரணையை விரைவுபடுத்தியுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, அடுத்த சில மாதங்களில் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கையை சமா்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், மாநில அளவிலான அதிகாரிகள் வழக்கு விசாரணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

தோ்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி விமா்சனம்

தோ்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கடுமையாக விமா்சனம் செய்துள்ளதற்காக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா வலியுறுத்தினாா். இத... மேலும் பார்க்க

பெங்களூரில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. துபையில் இருந்து பெங்களூரு, கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு வருகைதந்த பயணி ஒருவா், 3.5 கிலோ ... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கின் விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்!

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கில் நடத்தப்படும் விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் செப். 22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டம்

கா்நாடகத்தில் செப். 22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்த... மேலும் பார்க்க

அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாா்

அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் அளித்திருந்த மாற்று... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ தொடா்புள்ள ரௌடி ஷீட்டா் கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜ் தொடா்புள்ள ரௌடி ஷீட்டா் பிக்லு சிவா கொலை வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் கைதுசெய்தனா். பெங்களூரு, பாரதி நகரில் ஜூலை 15-ஆம் தேதி ரௌடி ஷீட்டா் பிக்லு சிவா (40), பயங்கர ஆயுதங்... மேலும் பார்க்க