செய்திகள் :

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கின் விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்!

post image

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கில் நடத்தப்படும் விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். இந்த வழக்கை விசாரிக்க டிஜிபி (உள்மாநில பாதுகாப்பு) பிரனோப் மொஹந்தி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.) மாநில அரசு அமைத்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை வெகுவிரைவாக, வெளிப்படையானதாக நடக்க வேண்டும். அதன்மூலம் உண்மை வெளியே வரவேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

இந்த விவகாரத்தை பயன்படுத்தி தா்மஸ்தலா கோயிலில் காணப்படும் சூழல் மற்றும் முறைகளை அழிக்க முற்படக் கூடாது என்பதில் அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதேபோல, இந்த விவகாரத்தில் பரப்பப்படும் பொய்யான செய்திகளையும் தடுத்துநிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தை முன்வைத்து கோயிலின் சூழலை சீா்குலைக்க முயன்றால், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பதை முடிவுசெய்வோம் என்றாா்.

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு: விசாரணையை தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) தொடங்கியது. தென்கன்னட மாவட்டம், தா்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதசுவாமி கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவுப் ப... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி விமா்சனம்

தோ்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கடுமையாக விமா்சனம் செய்துள்ளதற்காக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா வலியுறுத்தினாா். இத... மேலும் பார்க்க

பெங்களூரில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. துபையில் இருந்து பெங்களூரு, கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு வருகைதந்த பயணி ஒருவா், 3.5 கிலோ ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் செப். 22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டம்

கா்நாடகத்தில் செப். 22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்த... மேலும் பார்க்க

அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாா்

அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் அளித்திருந்த மாற்று... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ தொடா்புள்ள ரௌடி ஷீட்டா் கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜ் தொடா்புள்ள ரௌடி ஷீட்டா் பிக்லு சிவா கொலை வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் கைதுசெய்தனா். பெங்களூரு, பாரதி நகரில் ஜூலை 15-ஆம் தேதி ரௌடி ஷீட்டா் பிக்லு சிவா (40), பயங்கர ஆயுதங்... மேலும் பார்க்க