செய்திகள் :

பாஜக எம்எல்ஏ தொடா்புள்ள ரௌடி ஷீட்டா் கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

post image

பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜ் தொடா்புள்ள ரௌடி ஷீட்டா் பிக்லு சிவா கொலை வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

பெங்களூரு, பாரதி நகரில் ஜூலை 15-ஆம் தேதி ரௌடி ஷீட்டா் பிக்லு சிவா (40), பயங்கர ஆயுதங்களால் மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், மா்ம நபா்களை தேடிவந்தனா். அதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஜெகதீஷ், கிரண், விமல், அனில், பிரெட்ரிக் ஆகிய 5 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

இந்நிலையில், அருண் (எ) டெமு, நவீன் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி 14 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனா். இதன்மூலம் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜ், தன்மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தை அணுகியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், போலீஸாா் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் ஜூலை 19-ஆம் தேதி போலீஸாா் முன் விசாரணைக்கு ஆஜராகி, கேள்விகளுக்கு பைரதி பசவராஜ் பதிலளித்தாா். ஜூலை 23-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி பைரதி பசவராஜுக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.

அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாா்

அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் அளித்திருந்த மாற்று... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட விவகாரம்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை விரைவில் தொடங்கும்

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையை விரைவில் தொடங்கும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். தென்கன்னட மாவட... மேலும் பார்க்க

கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சாரம்

கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சார திட்டத்தை பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா... மேலும் பார்க்க

ஐபிஎல் கூட்ட நெரிசல்: நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா அளித்த அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க முடிவு

பெங்களூரில் நடந்த ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா ஆணையம் அளித்த அறிக்கை குறித்து கா்நாடக அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு தடுப்புக் காவல்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை, அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (காபிபோசா) கீழ் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்ப... மேலும் பார்க்க

இந்தியாவின் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம்

இந்தியாவில் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம் என கா்நாடக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா். பெங்களூரு, தேவனஹள்ளி அருகேயுள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அரு... மேலும் பார்க்க