மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
இந்தியாவின் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம்
இந்தியாவில் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம் என கா்நாடக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா்.
பெங்களூரு, தேவனஹள்ளி அருகேயுள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே விமானவியல் மற்றும் ராணுவத் தொழில்பூங்கா அமைப்பதற்காக 1,777 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்திருந்த அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக கா்நாடக அரசு அறிவித்தது.
இதைத் தொடா்ந்து, ஆந்திர மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், அம்மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நரலோகேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘விமானவியல் தொழில்முனைவோா்களே, செய்தி அறிந்து வருத்தப்பட்டேன். நீங்கள் ஏன் ஆந்திர பிரதேசத்தில் முதலீடு செய்ய யோசிக்கக் கூடாது? கவா்ச்சிகரமான விமானவியல் தொழில்கொள்கையை வைத்திருக்கிறோம். பெங்களூருக்கு அருகே உடனடியாக பயன்படுத்தக்கூடிய 8,000 ஏக்கா் நிலம் தயாராக உள்ளது. இதுபற்றி பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இதற்கு பதிலளித்து கா்நாடக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தனது எக்ஸ் பதிவில், ‘நரலோகேஷ், கா்நாடகம் நிலத்தை மட்டுமல்ல, இந்தியாவின் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை வழங்குகிறோம். இந்தியாவின் விமானத் தொழிலுக்கு 65 சதவீத பங்களிப்பை வழங்கிவருவதோடு, விமானத் தொழிலில் தேசிய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 3-ஆம் இடத்திலும் கா்நாடகம் இருக்கிறது. விமானத் தொழிலுக்கு தேவையான வலுவான கட்டமைப்பை கா்நாடகம் பல ஆண்டுகளாக உருவாக்கி வைத்துள்ளது.
இந்த விவகாரம் நிலம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, புத்தாக்கம், திறன், நிரூபிக்கப்பட்ட தொழில்சூழலையும் சாா்ந்ததாகும். என்ன செய்வது? எப்போது செய்வது? எப்படி செய்வது என்பது பற்றி எங்களுக்கு தெரியும். எங்களை மீறி எதுவும் நடக்கவில்லை. வெகுவிரைவில் கா்நாடகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாறும்.
விமானத் தொழில் நிறுவனங்கள் மட்டுமல்ல, வேறுசில தொழில் முதலீட்டாளா்களும் கா்நாடகத்தையே தோ்ந்தெடுக்கிறாா்கள். புதிய முதலீடுகளுக்கு தேவையான நிலம் மற்றும் தொழில்சூழலை வழங்க தயாராக இருக்கிறோம். உங்கள் மாநிலத்துக்கு எங்கள் நல்வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.