செய்திகள் :

நாமக்கல்: தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக் கொலை; சரக்கு லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்!

post image

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு புதுச்சத்திரம் அடுத்த ஏளூர் அருகே டிரைவர் விஜய் பள்ளி பஸ்சை ஓட்டி வந்துகொண்டிருந்தார். அப்போது ஏளூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் சரக்கு லாரியில், விஜய் ஓட்டி வந்த பஸ்சை நீண்ட நேரமாக முந்துவதற்கு முயற்சி செய்து உள்ளார். இதில் இரு வாகனமும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர்கள் விஜய், அரவிந்த் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த டிரைவர் விஜய்

இதனையடுத்து பள்ளி பஸ்சில் இருந்து கீழே இறங்கி வந்த விஜய்யை, அரவிந்த் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த, விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அரவிந்தை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விஜய்யின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் ஏ.எஸ்.பி ஆகாஷ் ஜோஷி உள்ளிட்ட போலீசார் விஜய்யின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த நிலையில் தனியார் பள்ளி பஸ் டிரைவரை தாக்கி கொலை செய்த அரவிந்தை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி பஸ் ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாமக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் மூவர் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பின் கிணற்றில் இருந்து செல்போன் மீட்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி வீட்... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்; 4 நாள்களுக்குப் பிறகு 3 பேர் கைது!

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில... மேலும் பார்க்க

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துற... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; பண மோசடி - ஜிம் பயிற்சியாளர் சிக்கிய பின்னணி!

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு ப... மேலும் பார்க்க

மருத்துவமனையில் நுழைந்து நோயாளி சுட்டுக் கொலை; திரைப்பட பாணியில் நடந்தேறிய கொடூரம்- பீகார் அதிர்ச்சி

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்ததடுத்து படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க பிரமுகர், தொழிலதிபர் என கொலைகள் பட்டியல் நீண்டுகொண்... மேலும் பார்க்க

சென்னை: ஒரே வீட்டை 2 பேருக்கு லீசுக்குக் கொடுத்த உரிமையாளர்; ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் கைது

சென்னை, அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இணையதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார்.அப்போது அயனாவரம், பாரதி நகரில் குடியிருக்கும் ... மேலும் பார்க்க