செய்திகள் :

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

post image

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் வாவுபலி பொருட்காட்சி இந்த முறை 100-வது ஆண்டாக நடைபெற்றுவருகிறது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இந்த பொருட்காட்சியில் விவசாயிகள் விளைவித்த பொருட்களின் கண்காட்சி, செடி மற்றும் மரக்கன்றுகள் கண்காட்சி மற்றும் விற்பனை, மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் திறமையை வெளிப்படுத்தும் கலைத்திறன் படைப்புகளின் கண்காட்சிகள் மற்றும் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. 20 நாட்கள் நடைபெறும் வாவுபலி பொருட்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். ஏராளமான பெண்கள் குழந்தைகளும் ஆர்வமுடன் பொருட்காட்சிக்கு வந்துசெல்கின்றனர். 

வட்டமாக நடனமாடிய நைட்டி இளைஞர்கள்

வாவுபலி பொருட்காட்சியை காண மக்கள் கூட்டமாக வந்திருந்த சமயத்தில் சுமார் 7 இளைஞர்கள் ஒரே மாதிரியான நைட்டி அணிந்து கூட்டத்துக்குள் புகுந்து ஆட்டம்போட்டனர். வட்டமாக சுற்றி சுற்றி நடனம் ஆடி அலப்பறை காட்டினர். மேலும், ஆபாசமான முறையில் பொதுமக்களுக்கு இடையூராக நடனமாடியதுடன், அதை வீடியோவும் எடுத்தனர். இளைஞர்களின் செயலால் பெண்கள் அச்சம் அடைந்தனர். அவர்கள் நடனத்தை வீடியோ எடுத்து ரீல்ஸாக பதிவிட்டனர். இளைஞர்களின் செயலுக்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிலர் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

நைட்டி அணிந்து பொருட்காட்சிக்கு சென்ற இளைஞர்கள்

இதற்கிடையே குழித்துறை வாவுபலி பொருட்காட்சி திடலில் ஆபாசமாக நடனமாடியதாகவும், ஆபாச சைகை காண்பித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நைட்டி அணிந்து ஆட்டம்போட்ட மார்ஷல், ஷாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது களியக்காவிளை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் மூவர் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பின் கிணற்றில் இருந்து செல்போன் மீட்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி வீட்... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்; 4 நாள்களுக்குப் பிறகு 3 பேர் கைது!

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில... மேலும் பார்க்க

நாமக்கல்: தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக் கொலை; சரக்கு லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; பண மோசடி - ஜிம் பயிற்சியாளர் சிக்கிய பின்னணி!

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு ப... மேலும் பார்க்க

மருத்துவமனையில் நுழைந்து நோயாளி சுட்டுக் கொலை; திரைப்பட பாணியில் நடந்தேறிய கொடூரம்- பீகார் அதிர்ச்சி

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்ததடுத்து படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க பிரமுகர், தொழிலதிபர் என கொலைகள் பட்டியல் நீண்டுகொண்... மேலும் பார்க்க

சென்னை: ஒரே வீட்டை 2 பேருக்கு லீசுக்குக் கொடுத்த உரிமையாளர்; ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் கைது

சென்னை, அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இணையதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார்.அப்போது அயனாவரம், பாரதி நகரில் குடியிருக்கும் ... மேலும் பார்க்க