செய்திகள் :

சென்னை: லவ் டார்ச்சர்; பண மோசடி - ஜிம் பயிற்சியாளர் சிக்கிய பின்னணி!

post image

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு பயிற்சியாளராக இருந்த ராஜ்குமார் என்பவர் இளம்பெண்ணுடன் நட்பாகப் ழகியிருக்கிறார். அதனால் இளம்பெண்ணும் ராஜ்குமாரும் போனில் பேசி வந்திருக்கிறார்கள். அப்போது ராஜ்குமார், தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. தனியாக வசித்து வருவதாக இளம்பெண்ணிடம் கூறி அனுதாபத்தை பெற்றியிருக்கிறார். அதோடு இளம்பெண்ணிடம் பணம் தேவை எனக் கூறி 1,10,000 ரூபாய் வரை ராஜ்குமார் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தையும் ராஜ்குமார் திரும்பக் கொடுக்கவில்லை.

ராஜ்குமார்

இந்தநிலையில்தான் ராஜ்குமாரின் சுயரூபம் வெளியில் தெரியவந்திருக்கிறது. நட்பாகப் பழகி வந்த இளம்பெண்ணிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜ்குமார். ஆனால் அந்தக் காதலை இளம்பெண் நிராகரித்திருக்கிறார். ஒருதலையாக இளம்பெண்ணை காதலித்த ராஜ்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி டார்ச்சர் செய்யத் தொடங்கியிருக்கிறார். அதனால் மனவேதனையடைந்த இளம்பெண், ராஜ்குமாரின் செல்போன் நம்பரை பிளாக் செய்ததோடு அவரோடு பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார். மேலும் தான் கடனாக கொடுத்த பணத்தையும் திரும்ப தரும்படி ராஜ்குமாரிடம் கேட்டிருக்கிறார். இதையடுத்து இளம்பெண்ணை நேரில் சந்தித்த ராஜ்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியிருக்கிறார். அதன் பிறகே சுதாரித்துக் கொண்ட இளம்பெண், அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் ராஜ்குமாரை விசாரணைக்கு அழைத்த போலீஸார், அவரிடம் காதல் டார்ச்சர், பணம் வாங்கியது குறித்து விசாரித்திருக்கிறார்கள். விசாரணைக்குப் பிறகு இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் ராஜ்குமாரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகு றித்து அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்ற இளம்பெண்ணிடம் ராஜ்குமார் தவறான நோக்கத்தில் பழகியிருக்கிறார். அதை தெரிந்துக் கொண்ட இளம்பெண், ராஜ்குமாருடன் பேசுவதை தவிர்த்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததோடு அவரை மிரட்டியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை இளம்பெண் எங்களிடம் கொடுத்த பிறகு ராஜ்குமாரை விசாரணைக்காக அழைத்தோம். அப்போது ராஜ்குமார், தன்மீது எந்தவித தவறும் இல்லை என்று கூறினார். ஆனால் ஆதாரங்கள் அடிப்படையில் ராஜ்குமாரை கைது செய்திருக்கிறோம். அவரின் பின்னணி குறித்தும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்" என்றனர்.

பல்லடம் மூவர் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பின் கிணற்றில் இருந்து செல்போன் மீட்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி வீட்... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்; 4 நாள்களுக்குப் பிறகு 3 பேர் கைது!

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில... மேலும் பார்க்க

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துற... மேலும் பார்க்க

நாமக்கல்: தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக் கொலை; சரக்கு லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள... மேலும் பார்க்க

மருத்துவமனையில் நுழைந்து நோயாளி சுட்டுக் கொலை; திரைப்பட பாணியில் நடந்தேறிய கொடூரம்- பீகார் அதிர்ச்சி

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்ததடுத்து படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க பிரமுகர், தொழிலதிபர் என கொலைகள் பட்டியல் நீண்டுகொண்... மேலும் பார்க்க

சென்னை: ஒரே வீட்டை 2 பேருக்கு லீசுக்குக் கொடுத்த உரிமையாளர்; ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் கைது

சென்னை, அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இணையதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார்.அப்போது அயனாவரம், பாரதி நகரில் குடியிருக்கும் ... மேலும் பார்க்க