செய்திகள் :

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி

post image

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலரும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் சாலைவலத்தின் போது பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “உங்களுக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது எங்களது அதிமுக அரசு. உங்களுடைய நிலத்தை யாராலும் தொடமுடியாது.

50 ஆண்டுகால பிரச்சினையான காவிரிப் பிரச்சினையைத் தீர்த்து வைத்ததும் எங்களுடைய அதிமுக அரசுதான். இயற்கை சீற்றமாக புயல், வெள்ளம் வந்தபோது எல்லாம் உங்களை காத்தது அதிமுக அரசுதான்.

மீனவர்களுக்கான திட்டமாக மீன்பிடித் தடைகாலத்தின் போது நிதியை உயர்த்தி வழங்கியதும் அதிமுகதான். கச்சத்தீவை மீட்போம் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், கச்சத்தீவை தாரைவார்த்தது அப்போதைய திமுக தலைவராக இருந்த கருணாநிதிதான். மீனவர்கள் மீதான அக்கறை இல்லாத கட்சி திமுகதான்.

தற்போது கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசியல் செய்வதாக திமுக பொய் கூறி வருகிறது. 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் திமுகவினரின் கண்ணுக்கு தெரியவில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டு மீனவர்களை காப்பாற்றியிருக்கலாமே?

மீனவ சமுதாயத்தினரின் வாக்கைப் பெறுவதற்காக தந்திரமாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். மத்திய அரசு மீது பழிபோட்டு, மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக முயற்சிக்கிறது” என்றார்.

AIADMK General Secretary Edappadi Palaniswami said that DMK is a party that does not care about fishermen

இதையும் படிக்க :சத்யஜித் ராய்யின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

அஜித்குமார் வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் மரண வழக்கில் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரில் வைத்திருந்த தனது நகைகள் காணாமல் போனதாக த... மேலும் பார்க்க

காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “... மேலும் பார்க்க

உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!

தமிழகத்தில் பெரும்பாலானவர்களின் கேள்வி, நம்ம ஊரில் எப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பதே. அது தொடர்பான தகவல்களை அளிக்க தமிழக அரசு சார்பில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.அரசுத் துறைகளின் சேவைகளை, ... மேலும் பார்க்க

பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை: முதல்வர்

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு!

மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர... மேலும் பார்க்க