செய்திகள் :

மருத்துவமனையில் நுழைந்து நோயாளி சுட்டுக் கொலை; திரைப்பட பாணியில் நடந்தேறிய கொடூரம்- பீகார் அதிர்ச்சி

post image

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்ததடுத்து படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க பிரமுகர், தொழிலதிபர் என கொலைகள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. பீகாரில் விரைவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தற்போது நடந்து வரும் படுகொலைகள் நிதீஷ் குமார் தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது மேலும் ஒரு சம்பவமாக பாட்னா மருத்துவமனைக்குள் பட்டப்பகலில் நுழைந்த கும்பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரிமினலை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. 12க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடைய சந்தன் மிஸ்ரா என்ற கிரிமினல் சிறையில் இருந்து பரோலில் வந்து பாட்னா பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.

இன்று காலையில் திடீரென 5 பேர் கொண்ட கும்பல் துமுதுமுவென மருத்துவமனைக்குள் நுழைந்தது. அவர்கள் ஒவ்வொரு அறையாக பார்த்துக்கொண்டே வந்து சந்தன் மிஸ்ரா சிகிச்சை பெற்று வந்த அறைக்குச் சென்று சரமாரியாக சுட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் திரைப்படங்களில் வருவது போன்று வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டுச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கார்திகே சர்மா கூறுகையில், ''12-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல் சிறையில் இருந்து பாகல்பூர் சிறைக்கு மாற்றப்பட்டு இருந்தார்.

அவர் மருத்துவ காரணங்களுக்காக பரோலில் வந்து பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அவரை எதிர்க்கோஷ்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தன் ஷெரு கூட்டத்தை சேர்ந்தவர்கள் இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கொலையில் மருத்துவமனை செக்யூரிட்டி கார்டுகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றன. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''மாநிலத்தில் யாராவது பாதுகாப்பாக இருக்கிறார்களா?. அரசு ஆதரவு பெற்ற கிரிமினல்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வந்த நோயாளியை சுட்டுக் கொலை செய்துள்ளனர். இது போன்று சம்பவம் 2005ம் ஆண்டுக்கு முன்பு நடந்ததா?'' என்று கேள்வி எழுப்பினார். மாநில டிஜிபி வினய் குமார் இது குறித்து கூறுகையில், ''குற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டை ஒப்பிடுகையில் மாநிலத்தில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது'' என்று தெரிவித்தார்.

பீகாரில் ரௌடிகளின் ஆட்சி நடப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 17 நாள்களில் 46 படுகொலைகள் நடந்திருக்கிறது என்று அக்கட்சி கூறி இருக்கிறது. துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் பப்பு யாதவ் எம்.பி மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் அவரை போலீஸார் உள்ளே விடவில்லை.

பல்லடம் மூவர் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பின் கிணற்றில் இருந்து செல்போன் மீட்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி வீட்... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்; 4 நாள்களுக்குப் பிறகு 3 பேர் கைது!

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில... மேலும் பார்க்க

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துற... மேலும் பார்க்க

நாமக்கல்: தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக் கொலை; சரக்கு லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; பண மோசடி - ஜிம் பயிற்சியாளர் சிக்கிய பின்னணி!

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு ப... மேலும் பார்க்க

சென்னை: ஒரே வீட்டை 2 பேருக்கு லீசுக்குக் கொடுத்த உரிமையாளர்; ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் கைது

சென்னை, அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இணையதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார்.அப்போது அயனாவரம், பாரதி நகரில் குடியிருக்கும் ... மேலும் பார்க்க