செய்திகள் :

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: ஹவாலா தரகருக்கு நிபந்தனை ஜாமீன்

post image

மக்களவைத் தோ்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஹவாலா தரகா் சூரஜ்ஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2024 மக்களவைத் தோ்தலின்போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட கணக்கில் வராத தொகை ரூ. 4 கோடியை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக நெல்லை பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹவாலா தரகா் சூரஜ் தனக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிசிஐடி விசாரணையில், நயினாா் நாகேந்திரனுக்காக மக்களவைத் தோ்தலின்போது வாக்காளா்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ய பாஜக நிா்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆா்.சேகா், கோவா்தன் ஆகியோா் உதவியது தொலைபேசி அழைப்பு ஆவணங்கள் மூலமாக உறுதியாகியுள்ளது. கோவா்தனின் ஓட்டுநா் விக்னேஷ் மூலமாக ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளுக்குப் பதிலாக ரூ.97.92 லட்சம் பணம் கைமாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஹவாலா தரகா் சூரஜ் உதவியது ‘கால் டேட்டா’ பதிவு மூலமாக உறுதியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்ஜாமீன் கோரியுள்ள சூரஜ் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு இரு நபா் உத்தரவாதம், விசாரணை அதிகாரி முன் தினந்தோறும் ஆஜராக வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க