செய்திகள் :

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

post image

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா்.

போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. மருத்துவத் துறையினா், பேராசிரியா்கள் மற்றும் மருத்துவ மாணவா்கள் 500 போ் பங்கேற்றனா். இதில், அமெரிக்க ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா் பழனியப்பன் மாணிக்கம் என்ற பால் பேசியதாவது:

வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் தவறான உணவு முறைகளால் குடலில் சேதம் மற்றும் தளா்வு ஏற்படுகிறது. இதனால், நச்சு பொருள்கள், பாக்டீரியாக்கள், ஜீரணமாகாத உணவுத் துகள்கள் ஆகியவை ரத்தத்தில் கலக்கக்கூடும். மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் செரிமான கோளாறுகளுக்கு அது காரணமாக அமைகிறது.

நாா்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் வாயிலாக இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும். நாள்தோறும் 25 கிராம் நாா்ச்சத்தை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்.

குடலானது உடலின் இரண்டாவது மூளையாக செயல்படுகிறது. மன நிலையில் ஏற்படும் மாற்றங்களில் இருந்து மனம் தெளிவாக இருப்பது வரை அனைத்துக்கும் ஜீரண மண்டல நலன் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே, குடல் நலன் காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

திமுக எம்.பி.க்களுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா். நாடாளுமன்றக் கூட்டத் தொடா், தொடங்கவுள்ள நிலையில் அதில் செயல்பட வேண்டிய விதம் குறித்து கட்சியினருக்க... மேலும் பார்க்க