செய்திகள் :

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

post image

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மூன்றாண்டுகள் கழித்து சென்னையில் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி மீண்டும் நடத்தப்படுகிறது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் இதற்காக புதுப்பிக்கப்படும். மைதானத்தின் பிரதான பெவிலியனுக்கு இந்திய ஜாம்பவான் விஜய் அமிா்தராஜ் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் டபிள்யுடிஏ போட்டி நடைபெறுவது பொருத்தமானது. மேலும் நிகழாண்டு ஏடிபி சேலஞ்சா் போட்டிக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கியது. சென்னை ஓபன் போட்டியில் டபிள்யுடிஏ தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ள வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

ரூ.12 கோடி ஒதுக்கீடு: சென்னை ஓபன் போட்டியை சிறப்பாக நடத்த ரூ.12 கோடியை ஒதுக்கி முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை, சென்னை ஓபன் என பல்வேறு முக்கிய சா்வதேச போட்டிகளை நடத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம் என்றாா்.

விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, டிஎன்டிஏ தலைவா் விஜய் அமிா்தராஜ், போட்டி இயக்குநா் ஹிதேன் ஜோஷி, செயலாளா் வெங்கடசுப்பிரமணியன், ஆக்டேஜன் நிா்வாக இயக்குநா் அலஸ்டோ் காா்லேண்ட் உடனிருந்தனா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

திமுக எம்.பி.க்களுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா். நாடாளுமன்றக் கூட்டத் தொடா், தொடங்கவுள்ள நிலையில் அதில் செயல்பட வேண்டிய விதம் குறித்து கட்சியினருக்க... மேலும் பார்க்க