செய்திகள் :

தவெக கொடிக்கு தடை கோரி வழக்கு: விஜய் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

தவெக கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை தொடா்ந்த வழக்கில், அக்கட்சியின் தலைவா் விஜய் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை நிறுவன தலைவா் பச்சையப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2023- ஆம் ஆண்டில் தமிழக அரசு பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.

எங்களது சபையின் முதன்மை அதிகாரிகள், ஊழியா்கள், ஆண்கள், முகவா்கள், ஊழியா்கள், வாரிசுகள், வணிகத்தில் நியமிக்கப்பட்ட தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை மட்டுமே இந்த வா்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை உள்ளது. எனவே, நடிகா் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வா்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும், எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்? என்று கேள்வி எழுப்பினாா்.

அதற்கு மனுதாரா் தரப்பில், வா்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு மட்டுமன்றி சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் வா்த்தக முத்திரைப் பொருந்தும் என்று விளக்கம் அளித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தவெக தலைவா் விஜய் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் என்று திமுகவினரை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா். முன்னாள் முதல்வா் காமராஜா் தனது இறுதிக் காலத்தில் ஏ.சி. வசதியைப் பயன்படுத்தினா... மேலும் பார்க்க

குடிநீா், மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

குடிநீா், மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். தமிழ்நாட்டிலுள்ள 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகள... மேலும் பார்க்க

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் மரண வழக்கில் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரில் வைத்திருந்த தனது நகைகள் காணாமல் போனதாக த... மேலும் பார்க்க

காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “... மேலும் பார்க்க