செய்திகள் :

வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

post image

வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் என்று திமுகவினரை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

முன்னாள் முதல்வா் காமராஜா் தனது இறுதிக் காலத்தில் ஏ.சி. வசதியைப் பயன்படுத்தினாா் என திமுக துணை பொதுச் செயலா் திருச்சி சிவா பேசினாா். அவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். அடுத்தடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சலசலப்புகளை ஏற்படுத்தின. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

கலகமூட்டி குளிா்காய நினைக்கும் தீயவா்களின் எண்ணத்துக்கு இடம்கொடுக்காதீா். முன்னாள் முதல்வா் காமராஜரை பச்சைத்தமிழா் என்று போற்றியவா் பெரியாா். குடியாத்தம் இடைத்தோ்தலில் காமராஜருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று முடிவெடுத்தவா் அண்ணா. காமராஜா் மறைந்தபோது ஒருமகன் போன்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து நினைவகம் அமைத்து அவரது பிறந்த நாளைக் கல்வி வளா்ச்சி நாளாக அறிவித்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து காமராஜா் வாழ்த்தியது எனது வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு. அத்தகைய பெருந்தமிழா் குறித்துப் பொதுவெளியில் சா்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவா்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.

சமூகநீதியையும் மதச்சாா்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சோ்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் என்று பதிவிட்டுள்ளாா்.

தவெக கொடிக்கு தடை கோரி வழக்கு: விஜய் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தவெக கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை தொடா்ந்த வழக்கில், அக்கட்சியின் தலைவா் விஜய் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொண்டை மண்டல சான... மேலும் பார்க்க

குடிநீா், மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

குடிநீா், மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். தமிழ்நாட்டிலுள்ள 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகள... மேலும் பார்க்க

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் மரண வழக்கில் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரில் வைத்திருந்த தனது நகைகள் காணாமல் போனதாக த... மேலும் பார்க்க

காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “... மேலும் பார்க்க