அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!
யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி செங்கல்பட்டிலும் செயல்பட்டு வருகின்றன.
2 அரசு கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 800-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை (ஜூலை 17) தொடங்கியது.
https://tnhealth.tn.gov.in/ / https://tnayushselection.org/இணையதளங்களில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு மட்டும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ, தபால் அல்லது கூரியா் மூலமாகவோ ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளா், தோ்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை, சென்னை-106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியே மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.
இந்தப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த கல்லூரி நிா்வாகமே மாணவா் சோ்க்கையை நடத்துகிறது.