செய்திகள் :

தமிழ்நாடு வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் மாணவி முதலிடம்!

post image

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புகளுக்குத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா முதலிடம் பிடித்துள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புகளுக்குத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா முதலிடம் பெற்றார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கு இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களை மாணவிகளைப் பிடித்து உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,

இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள 14 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு 6,921 அரசாங்க கல்லூரிகளுக்கு 2,516 இடங்களும், தனியார் கல்லூரிகளுக்கு 445 இடங்களும் என மொத்தம் 6,921 இடங்கள் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணாமலை பல்கலைக்கழகம் தெற்கு 3,40 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதில் இளம் அறிவியல் மாணவர்கள் சேர்க்கைக்கு மொத்தம் 37 ஆயிரத்து 7 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்குள் 29,349 பேர் தரவரிசையில் தர வரிசைக்குத் தகுதியானவர்கள் எனக் கருதப்பட்டனர். விண்ணப்பித்த

மாணவிகள் எண்ணிக்கை 18,443 ஆகும். விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 9,370 ஆகும். பொது இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் 27 ஆயிரத்து 823, விண்ணப்பதாரர்களும் தொழில்முறை கல்வி ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீட்டில் 1,266 விண்ணப்பித்து இருந்தனர்.

முன்னாள் ராணுவ வீரர்களின் இட ஒதுக்கீட்டில் 20 இடங்களுக்கு 256 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளியில் 7.5% பயின்ற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 403 இடங்களுக்கு 992 விண்ணப்பித்து உள்ளனர். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 20 இடங்களுக்கு 288 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் 128 இடங்கள் 132 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ் வழியில் இளம் அறிவியல், வேளாண்மை மற்றும் இளம் அறிவியல் தோட்டக்கலை ஆகிய இரண்டு பாடப் பிடிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

தமிழ் வழியில் பயில 893 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் 8,128 பேரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் 8,738 பேரும், ஆதிதிராவிடர் 8,239 பேரும், அருந்ததியர் 1,155 பேரும், பொதுப் பிரிவினர் 239 பேரும் பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர்கள் 633 பேரும் பழங்குடியினர் 691 பேரும் என மொத்தம் 27 ஆயிரத்து 823 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த ஆண்டில் 195 மதிப்பீட்டில் 569 பேரும் 190 மதிப்பெட்டியில் 1,956 பேரும் உள்ளனர். 

இந்த தரவரிசை பட்டியல் மாணவ - மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த திவ்யா என்ற மாணவி முதலிடத்தையும், கடலூரைச் சேர்ந்த ஹம்தா மெஹதாப் என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், இலக்கியா என்ற மாணவி மூன்றாவது இடத்தையும் பெற்று உள்ளனர். இது தவிர 25 இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகளுக்குத் தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

SUMMARY

The ranking list of Tamil Nadu Agricultural University has been released. Divya, a student from Villupuram, has topped.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாள். மாணவா்கள் ஜூன் 23 முதல் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவிய... மேலும் பார்க்க

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2026-265-ஆம் ஆண்டு இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவை திங்கள்கிழமை(ஜூன் 2) முதல் விண்ணப்பிக்கலாம் என பல்... மேலும் பார்க்க

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் தமிழ் எம்.ஏ. படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் கூடிய தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் ப... மேலும் பார்க்க