செய்திகள் :

அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது: முதல்முறையாக கமேனி பேச்சு!

post image

இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு முதல்முறையாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி முதல்முறையாக பொது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த போரானது, 12 ஆம் நாளை எட்டிய நிலையில், ஜூன் 24 ஆம் தேதியன்று போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், போர் தொடங்கியது முதல் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு முதல்முறையாக இன்று (ஜூன் 26) அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் வெளியான விடியோ பதிவில் இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது என கத்தாரிலுள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது அவர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைக் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

“ இந்தப் போரில் அமெரிக்காவுக்கு எந்தவொரு பலனும் இல்லை, இஸ்லாமிய குடியரசு வெற்றியடைந்துள்ளது. அவர்களது தாக்குதல்களுக்கு பதிலாக அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.” என அவர் பேசியுள்ளார்.

இத்துடன், இந்தப் போரில் சியோனிச ஆட்சி முற்றிலும் அழிக்கப்படும் என்பதை உணர்ந்ததால் மட்டுமே அமெரிக்கா தலையிட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 22 ஆம் தேதி, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Iran's supreme leader Khamenei says his country delivered a hand slap to America's face' in first appearance since ceasefire

இதையும் படிக்க: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி மையத்தில் சுபான்ஷு சுக்லா! அவரின் முதல் உரை என்ன தெரியுமா?

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா முதல் முறையாக உரையாற்றினார். அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ தி... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! ஒரே நாளில் 30,000 பேர் தாயகம் திரும்பினர்!

ஈரான் நாட்டிலிருந்து ஒரே நாளில் 30,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மற்றும் நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில், அந்ந... மேலும் பார்க்க

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்க..! - டிரம்ப் வேண்டுகோள்

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.2019 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது லஞ்சம், ஊழல், நம்பிக்கை மீறல், மோசடி உள்ளிட்ட பிரிவுகள... மேலும் பார்க்க

சீனாவில் வாகனம் மோதி பள்ளிக் குழந்தைகள் படுகாயம்! மீண்டும் கார் தாக்குதலா?

சீனாவின் பெய்ஜிங் புறநகர் மாவட்டத்திலுள்ள, தொடக்கப் பள்ளியின் அருகில் குழந்தைகள் மீது ஒருவர் காரால் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெய்ஜிங் மாகாணத்தின் மியூன் மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளி அருகில... மேலும் பார்க்க

தடுப்பூசி போடுவதில் தயக்கம்! கோடிக்கணக்கான குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து!

உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டம் குறைந்து விட்டதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் பணக்கார மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்து விட்... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்தார் சுபான்ஷு சுக்லா!

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழுவினர் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக டிராகன் விண்கலத்தை இணைத்து புதிய சாதனையும் படைத்துள்ளார்.... மேலும் பார்க்க