செய்திகள் :

'இனி எங்களை சீண்டினால், பெரிய விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும்' - அமெரிக்காவை எச்சரிக்கும் காமேனி

post image

கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) நள்ளிரவில், ஈரானின் அணு ஆயுதத் திட்டப் பகுதிகளைத் தாக்கியது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஆதரவான செயலாக பார்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து ஈரான் உச்சத் தலைவர் காமேனி இன்று எக்ஸ் தளத்தில் அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார். அவை...

"அமெரிக்காவை வீழ்த்திய ஈரானின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துகள். ஜியோனிச ஆட்சி முற்றிலும் அழிக்கப்பட்டுவிடுமோ என்று அமெரிக்கா போரில் நேரடியாக நுழைந்தது. ஆக, அதை காக்க தான் அமெரிக்கா நுழைந்தது. ஆனால், ஒன்றையும் சாதிக்கவில்லை".

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

"இஸ்லாமிய குடியரசு அமெரிக்காவின் முகத்தில் பலமான அறையைக் கொடுத்தது. அமெரிக்காவின் முக்கிய முகாமான அல்-உதெய்த் விமானத் தளத்தை ஈரான் தாக்கி மற்றும் சேதத்தை ஏற்படுத்தியது".

"இந்தப் பகுதியில் இருக்கும் அமெரிக்காவின் முக்கிய மையங்கள் அனைத்தையும் இஸ்லாமிய குடியரசால் நெருங்க முடியும். தேவை ஏற்பட்டால், அதன் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் மேற்கொள்ளப்படலாம். இனி ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், எதிரி நிச்சயம் பெரிய விலையை கொடுக்க வேண்டியதாக இருக்கும்".

"ஈரான் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கூறினார். இது அமெரிக்க அதிபர் வாயிலிருந்து வெளி வராத அளவிற்கு பெரிய வார்த்தை ஆகும்".

இந்தப் பதிவுகள் மூலம் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிகையை விடுத்துள்ளார் காமேனி.

விழுப்புரம்: பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி வால்! - மருத்துவர்கள் பரிசோதனை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ள ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 52 மாணவ மாணவிகளிடம் மருத்துவர்கள் பரிசோதனை ... மேலும் பார்க்க

'அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதி மகனுக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?' - இ.பி.எஸ் காட்டம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22), மதுரையில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்களின் முன்னிலையில்... மேலும் பார்க்க

தஞ்சை: ”சாலையில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர்”- அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டம்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 31 வது வார்டில் உள்ளது செண்பகவள்ளி நகர். இப்பகுதியில் பாதாள சாக்கடை மெயின் குழாய் பதிக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பணிகள் இன... மேலும் பார்க்க

'சியோனிச ஆட்சியை வீழ்த்தி... நசுக்கி'- இஸ்ரேல் - ஈரான் தாக்குதலுக்கு பிறகு காமேனியின் முதல் கமென்ட்!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நிறுத்தத்தை அடுத்து, ஈரான் நாட்டிற்குள் எழுந்த மிகப்பெரிய கேள்வி, 'ஈரானின் உச்சத் தலைவர் காமேனி எங்கே?' இந்தத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து அவரை வெளியிடங்களில் காணவே முடியவ... மேலும் பார்க்க

`இந்திரா காந்தி சுயநலத்துகாகவே அவசர நிலையை அறிவித்தார்!’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய 50-வது ஆண்டை நினைவுகூறும் விதமாக, அரசியலைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதனடிப்படையில் புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை சார... மேலும் பார்க்க