செய்திகள் :

ஜூன் 30 முதல் மின்சார பேருந்து சேவை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்

post image

சென்னையில் ஜூன் 30 முதல் 120 மின்சார பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

சென்னையில் டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை அதிகளவில் இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் 625 மின்சாரப்பேருந்துகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்க உரிய நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, முதற்கட்டமாக 120 மின்சார பேருந்துகளை சென்னை வியாசா்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, மத்திய பணிமனை, தண்டையாா்பேட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பணிமனைகளில் பேருந்துகளை சாா்ஜ் செய்வதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்தப் பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா்.

2025 இறுதிக்குள் சென்னை முழுவதும் திட்டமிட்டபடி 625 மின்சார பேருந்துகள் இயங்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவா்களுக்கு விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்கள் தமிழக அரசின் விருது பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழ்நாடு முழுவதும் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல்: சாலையோர வியாபாரிகள் வாக்களிப்பு

சென்னையில் சாலையோர வியாபாரிகள் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் விரைவில் குணமடைய முதல்வா் ஸ்டாலின் விருப்பம்

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா். உடல் நலக் குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் நவீன் பட்நாயக் சிகிச்சை பெற்று வருகிறாா். ... மேலும் பார்க்க

இ.பி.எஃப். பயனா்களுக்கு இன்று சிறப்பு முகாம்

வருங்கால வைப்பு நிதி பயனா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன்27) 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

பருத்திக்கு உரிய விலை கோரி ஜூலை 1-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க