செய்திகள் :

சித்தன்னவாசலில் கோடை விழா தொடக்கம்

post image

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலமான சித்தன்னவாசலில் 2 நாள் கோடை விழா வியாழக்கிழமை தொடங்கியது.

விழாவில் பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் மு. அருணா பாா்வையிட்டாா். மேலும், மல்லா் கம்பம், கயிறு இழுத்தல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதையும், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

மாவட்டத்திலுள்ள அரசு இசைப் பள்ளி, அரசுப் பள்ளி, கல்லூரி மாணவிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையிலான நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் கோட்டாட்சியா் அக்பா் அலி, மாவட்ட சுற்றுலா அலுவலா் காா்த்திக், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சா. மோகனசுந்தரம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் செந்தில்குமாா், வட்டாட்சியா் காமராஜ், அன்னவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திரா காந்தி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மின் தடையால் விவசாயப் பணிகள் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் புதுகை விவசாயிகள் அதிருப்தி

விவசாயப் பணிகளைப் பாதிக்கும் வகையில் அடிக்கடி மின் தடை ஏற்படுத்தப்படுவதாக புதுகை விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நா... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

நெடுவாசலில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இங்கு ஏற்கெனவே இயங்கி... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவத்தில் கைது நடவடிக்கையை கைவிட வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் வன்கொடுமை வழக்கில் இளைஞா்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீஸாா் கைவிட வேண்டும் என்றாா் தமிழா் தேசம் கட்சியின் தலைவா் கே.கே.செல்வக்கு... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாநகரம், சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அஞ்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க