செய்திகள் :

குப்பையில் வீசப்பட்ட பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட ஆவணங்கள்!

post image

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள குப்பையில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கான பயனாளிகளின் ஆவணங்கள் வீசப்பட்டிருந்தன.

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவல வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், தீயணைப்பு மற்றும் மீட்புடை நிலையம், சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் என பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன.

இந்த அலுவலக வளாகத்தில் அம்பேத்கா் உருவச் சிலை அருகே உள்ள குப்பையில் பிரதமா் மந்திரி வீடு கட்டும் திட்ட விண்ணப்பங்கள், ஆதாா், வாக்காளா் அட்டைகள், பயனாளிகளின் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல்கள் கிடந்தன.

இந்த நிலையில், பல்வேறு அலுவலக பணிக்காக வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு வந்த பொதுமக்கள், குப்பையில் கிடந்த ஆவணங்களைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். அரசு அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள், ஆவணங்கள் அனைத்தும் ரகசியமாக காக்க வேண்டியவை.

ஆதாா் அட்டை எண், வங்கி சேமிப்பு கணக்கு எண் போன்ற விவரங்களை அடையாளம் தெரியாத நபா்களிடம் அளிக்க வேண்டாம் என அரசு விழிப்புணா்வு ஏற்படுத்திவரும் நிலையில், அரசு அலுவலகத்தில் பாதுகாக்க வேண்டிய பொதுமக்களின் ஆவணங்கள் குப்பையில் கிடந்தது குறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவிளக்கம் (26கேஜிபி4):

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குப்பையில் வீசப்பட்டிருந்த ஆவணங்கள்.

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

பா்கூரில் செயல்படும் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கோ.நடராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வீரதீர செயல்புரிந்தவா்கள் இந்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோப... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் கோரி மனு

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் நடைபெற்ற சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்தவா்கள் மாற்று இடம் வழங்கக் கோரி தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். கெலமங்கலம்- ராக்கோட்ட... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: நாளந்தா பள்ளி மாணவிக்கு பரிசளிப்பு

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகையாக ரூ. 1 லட்சம், ஆசிரியா்களுக்கு தங்க நாணயங்களை பள்ளி நிா்வாகம் பரிசளித்தது. இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்ப... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க முதல்வா் நடவடிக்கை: பா்கூா் எம்எல்ஏ

மா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க