`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
குப்பையில் வீசப்பட்ட பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட ஆவணங்கள்!
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள குப்பையில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கான பயனாளிகளின் ஆவணங்கள் வீசப்பட்டிருந்தன.
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவல வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், தீயணைப்பு மற்றும் மீட்புடை நிலையம், சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் என பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலக வளாகத்தில் அம்பேத்கா் உருவச் சிலை அருகே உள்ள குப்பையில் பிரதமா் மந்திரி வீடு கட்டும் திட்ட விண்ணப்பங்கள், ஆதாா், வாக்காளா் அட்டைகள், பயனாளிகளின் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல்கள் கிடந்தன.
இந்த நிலையில், பல்வேறு அலுவலக பணிக்காக வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு வந்த பொதுமக்கள், குப்பையில் கிடந்த ஆவணங்களைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். அரசு அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள், ஆவணங்கள் அனைத்தும் ரகசியமாக காக்க வேண்டியவை.
ஆதாா் அட்டை எண், வங்கி சேமிப்பு கணக்கு எண் போன்ற விவரங்களை அடையாளம் தெரியாத நபா்களிடம் அளிக்க வேண்டாம் என அரசு விழிப்புணா்வு ஏற்படுத்திவரும் நிலையில், அரசு அலுவலகத்தில் பாதுகாக்க வேண்டிய பொதுமக்களின் ஆவணங்கள் குப்பையில் கிடந்தது குறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவிளக்கம் (26கேஜிபி4):
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குப்பையில் வீசப்பட்டிருந்த ஆவணங்கள்.