செய்திகள் :

Vedan: ``பணத்திற்காக சாதியை விற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை'' - விமர்சனத்துக்கு பதில் அளித்த வேடன்

post image

2020-ம் ஆண்டு, ``நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் தனியிசைப்பாடலை வெளியிட்டார் ராப் பாடகர் வேடன்.

அவரின் இசையும், குரலும், உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளும் மலையாள உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போது முதல் வேடனின் பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பட்டன. குறிப்பாக வேடனின் பாடல்களில் சாதி, அடக்குமுறைக்கு எதிரான புரட்சிகரக கருத்துகள் நிறைந்திருந்தன.

பாடகர் வேடன்
பாடகர் வேடன்

இந்த நிலையில், மலையாள ராப்பர் வேடன் தனது பாடல்களில் சாதியக் குறிப்புகள் மூலம் சம்பாதிப்பதாக ஒரு சாராரால் விமர்சிக்கப்பட்டார். இந்த விமர்சனத்துக்கு ராப் பாடகர் வேடன் பதிலளித்திருக்கிறார்.

கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர்,``எனது எந்தப் பாடலிலும் நான் சாதியைப் பற்றிப் பேசியதாக எனக்குத் தெரியவில்லை. எனது எந்தப் பாடல் சாதியைப் பற்றிப் பேசுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் சாதியைப் பற்றிப் பேசவில்லை, சாதிக்கு எதிராகப் பேசுகிறேன். வேடன் பணத்திற்காக சாதியை விற்கத் தேவையில்லை. என் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து என் நேரத்தை வீணடிக்கமாட்டேன்.

என் வேலையில் முழுமையாக ஈடுபடுவதில் மகிழ்ச்சியைக் காண்கிறேன். நான் செய்யும் வேலை எப்போதும் ஏதோ ஒரு வகையான எதிர்வினையைச் சந்திக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் தொடர்ந்து வேலை செய்வேன்.

வரலாற்று ரீதியாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களில், படிப்பு என்பது அன்றாட வாழ்க்கையின் இயல்பான பகுதியாக இல்லை. இன்றும் கூட, அத்தகைய பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் கல்விக்காக போராடி வருகின்றனர்.

VEDAN
VEDAN

அத்தகைய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் படித்து தகுதி மூலம் வெற்றி பெற்றாலும், இடஒதுக்கீட்டினால் மட்டுமே அவர்கள் அங்கு வந்ததாக கூறுகிறார்கள். எனவே, நீங்கள் என்ன சொன்னாலும், அது சரியாகப் புரிந்து கொள்ளப்படாது.

எனது கருத்திலிருந்து ஏதோ ஒரு வார்த்தை எடுக்கப்பட்டு கொண்டாட்டமாகவோ அல்லது விவாதத்தின் தலைப்பாகவோ மாற்றப்படுகிறது. ஆனாலும் சமூகப் பிரச்னைகளை முன்னிலைப்படுத்த எனது இசையைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.

Anupama: "மலையாள சினிமாவில் விமர்சனங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன்" - அனுபமா வருத்தம்

பிரவீன் நாரயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'Janaki vs State Of Kerala' திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிற... மேலும் பார்க்க

Mammootty: ``மம்மூட்டிக்கு ஒரு சிறிய உடல்நலப் பிரச்னை..." - MP ஜான் பிரிட்டாஸ் சொல்வது என்ன?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. அதை முற்றிலும் மறுத்த நடிகர் சங்கம், ``நடிகர் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக வரும் செய்திகள் போலியானவை... மேலும் பார்க்க

Anupama: ``சிம்ரன், அசினுக்கு நடந்ததுதான் அனுபாமாவுக்கு நடக்கிறது!'' - சுரேஷ் கோபி ஓப்பன் டாக்

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அனுபம... மேலும் பார்க்க

Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு புகார்

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா நடிப்பில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘துடரும்’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘துடரும்' படத்தில்...ஓட... மேலும் பார்க்க

Dileep: "காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மாறிவரும் நிலையைப் பிரதிபலிக்கும் கதை!" - நடிகர் திலீப்

மலையாளத் திரையுலகில் நடிகர் திலீப் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ப்ரின்ஸ் & ஃபேமிலி. இது நடிகர் திலீப்பின் 150-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரையரங்க... மேலும் பார்க்க

Premalu 2 Update: 'ப்ரேமலு 2' திரைப்படம் கைவிடப்படுகிறதா? - என்ன சொல்கிறார் படத்தின் தயாரிப்பாளர்

கடந்தாண்டு மலையாளப் படங்கள் பலவற்றை தமிழ் சினிமாவிலும் தூள் கிளப்பியிருந்தன. அந்த வரிசையில் 'ப்ரேமலு', 'மஞ்சும்மல் பாய்ஸ்' உட்பட பல மலையாள படைப்புகள் கடந்தாண்டு பல பக்கங்களிலும் கவனம் ஈர்த்திருந்தன. ச... மேலும் பார்க்க