செய்திகள் :

நொய்டா: தனியார் நிறுவனத்தில் தீ விபத்து! நகரைச் சூழ்ந்த கரும்புகை!

post image

நொய்டாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 2-ல் உள்ள தனியார் பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் கட்டடத்தில் இருந்து தீ உயரே எழும்பியது. மேலும், அங்கிருந்து வெளியான கரும்புகையால் அந்தப் பகுதி மக்கள் மூச்சுத் திணறலால் பாதிப்படைந்தன.

இதுகுறித்து தீயணைப்பு தலைமை அதிகாரி கூறுகையில், “காலை 5.30 மணியளவில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தீயின் தீவிரம் அதிகமானதால், கூடுதல் வாகனங்கள் அனுப்பப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன” என்றார்.

அருகில் உள்ள மாவட்டங்களான ஹபூர், புலந்த்ஷஹர், காஜியாபாத் மற்றும் மீரட் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புக் குழுக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மொத்தம் 25 தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீயில் யாருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அதிகளவிலான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. அதன் மதிப்பீடுகள் குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வார தொடக்கத்தில், ரோஹினியின் ரிதாலா பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். நொய்டா பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகள் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A massive fire broke out early Friday morning at a private paint manufacturing firm located in Sector 2, Noida. Thick plumes of smoke and towering flames were seen billowing from the building, prompting a large-scale emergency response.

இதையும் படிக்க...ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகள்! மக்கள் பீதி!

பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் விபரீதம்!

ஹைதராபாதில் மகள்களின் கல்விச் செலவுக்காக ஆபாசப் படத்தில் நடித்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் ஆம்பர்பேட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மனைவியுடன் சேர்ந்து மொபைல் செய... மேலும் பார்க்க

ஹிமாசலில் திடீர் வெள்ளம்: இதுவரை 5 சடலங்கள் மீட்பு

ஹிமாசலில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹமாசலில் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் புதன்கிழமை மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இ... மேலும் பார்க்க

அரசியலமைப்பை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை!

அரசியலமைப்பு புத்தகத்தைக் கையில் எடுப்பதில் எந்தப் பயனுமில்லை. அதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்த... மேலும் பார்க்க

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்பு

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்கப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 55, சி-5 இல் உள்ள ஆனந்த் நிகேதன் விருதா சேவா ஆசிரமத்தின் முதியோர் இல்லத... மேலும் பார்க்க

அதிகளவில் நீர்ப் பயன்பாடு! விவசாயத்துக்கும் வரி விதிக்கும் மத்திய அரசு?

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்ட... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: மீண்டும் ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை?

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு கொல்கத்தாவில் காஸ்பா பகுதியில் மாநில... மேலும் பார்க்க