செய்திகள் :

அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு! அமித் ஷா மீண்டும் வாக்குறுதி!

post image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில், நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையின் திறன்களை தேசிய கட்டமைப்புக்கு பயன்படுத்திக் கொள்வதோடு, அவருக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போதும் அதனையே மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசியலில் அண்ணாமலை முக்கிய பங்கு வகிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 2026 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளர் அதிமுகவில் இருப்பார் என்றும் தெரிவித்தார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை நேரடியாக அமித் ஷா கூறாதது, அரசியல் விமர்சகர்களிடையே பேசுபொருளாகியது.

இருப்பினும், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்று அமித் ஷா கூறியதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்து முடிவு செய்வார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னிடம் இருந்து போதைப்பொருள் ... மேலும் பார்க்க

திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் நாளை(ஜூன் 28) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அண... மேலும் பார்க்க

ஜூலை 7-ல் அமித் ஷா சென்னை வருகை! ஆனால், இபிஎஸ் இல்லை?

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை நாளிலேயே எடப்பாடி பழனிசாமியும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் அக்கட்சித் தலைமை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூன் 27) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், பு... மேலும் பார்க்க

கைதாகிறாரா எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி ?

சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸின் தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி... மேலும் பார்க்க