செய்திகள் :

இந்தியா - ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

post image

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் உரையாடியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ச்சியுடன், இன்று (ஜூன் 27) மதியம் செல்போன் வாயிலாக உரையாடியதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலின்போது, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் குறித்து அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. இத்துடன், அந்நாட்டிலிருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர உதவியதற்கு தனது நன்றிகளைத் தெரிவித்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஜூன் 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் - ஈரான் இடையில் நடைபெற்ற போரானது நிறுத்தப்படுவதாக, கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்த போர்நிறுத்தத்தை வரவேற்ற இந்திய அரசு, ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அவ்விடங்களில் நிலவும் கதிர்வீச்சுகள் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

India and Iran Foreign Ministers' Dialogue!

இதையும் படிக்க: கலப்பட எரிபொருள்: நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 13 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட்டாக ரூ.22 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 13 நக்சல்கள், காவல் துறையினரிடம் இன்று சரண்டைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், அம்மாநிலத்த... மேலும் பார்க்க

கலப்பட எரிபொருள்: நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்

'கலப்பட' எரிபொருள் காரணமாக ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது.மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் பாதுகாப்பு வாகனங்களில் 19 வாகனங்கள் கலப்பட பெட்ரோல் மற... மேலும் பார்க்க

கோவா: சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர் நாடுகடத்தல்!

கோவா மாநில காவல் துறையினர் மேற்கொண்ட ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம் ... மேலும் பார்க்க

பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் விபரீதம்!

ஹைதராபாதில் மகள்களின் கல்விச் செலவுக்காக ஆபாசப் படத்தில் நடித்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் ஆம்பர்பேட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மனைவியுடன் சேர்ந்து மொபைல் செய... மேலும் பார்க்க

ஹிமாசலில் திடீர் வெள்ளம்: இதுவரை 5 சடலங்கள் மீட்பு

ஹிமாசலில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹமாசலில் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் புதன்கிழமை மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இ... மேலும் பார்க்க

அரசியலமைப்பை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை!

அரசியலமைப்பு புத்தகத்தைக் கையில் எடுப்பதில் எந்தப் பயனுமில்லை. அதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்த... மேலும் பார்க்க