செய்திகள் :

பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு: புதுவை முதல்வர்

post image

புதுச்சேரி பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாஜகவைச் சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் சரவணன் குமார், தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினர்.

இதனையடுத்து முதல்வர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்துப் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் ரங்கசாமி, தன்னை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என அமைச்சர் சாய் சரவணன்குமார் கொடுத்த ராஜிநாமா கடிதம் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டதாகவும், இந்தக் கடிதம் ஏற்கப்பட்டதாகவும், அமைச்சரின் ராஜிநாமாவும் ஏற்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த அமைச்சர் யார் என்பது இதுவரை முடிவாகவில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

Chief Minister Rangasamy announced after a meeting with the Lieutenant Governor that the resignation of the Puducherry BJP minister has been accepted.

இதையும் படிக்க: ஜூலை 7-ல் அமித் ஷா சென்னை வருகை! ஆனால், இபிஎஸ் இல்லை?

புதுச்சேரி: 3 பாஜக எம்எல்ஏக்கள் திடீர் ராஜிநாமா!

புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை பேரவைத் தலைவர் செல்வத்திடம் கொடுத்துள்ளதால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பு... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தின் முதல்வா் அன்னப்ப... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்குப் பணி ஆணை வழங்கல்

புதுவை கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை கூட்டுறவுத் துறையின்கீழ் நேரடி நியமனத்திற்காக 15.12.2024 அன்று நடத்தப்பட்ட இள... மேலும் பார்க்க

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சி: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சியை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர தூபே புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிற... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஒத்திகை புதன்கிழமை தொடங்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம்: புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் அஷ்ய பாத்ரா நிறுவனம் புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு திங்கள்கிழமை கையொப்பமிட்டுள்ளது. அஷ்யபாத்ரா நிறு... மேலும் பார்க்க