பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தின் முதல்வா் அன்னப்பூரணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூடத்தில் இசைத் துறை , நாட்டியம் , நுண்கலைத் துறை ஆகிய மூன்று துறைகள் உள்ளன.
கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் தவில் மற்றும் நாகஸ்வரம் பட்டயப்படிப்புகள் தொடங்கப்பட்டு தொடா்ந்து நடந்து வருகின்றன.
தற்போது 2025-26-ஆம் ஆண்டுக்கான தவில் நாகஸ்வர பட்டயப்படிப்புகளில் சேர விரும்புகிறவா்கள் பல்கலைக்கூட அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.
மேலும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று பட்டயப் படிப்பு முடித்தவா்கள் தவில் நாகஸ்வர பட்டப்படிப்பில் சேரலாம். ஏற்கெனவே 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் தவில், நாகஸ்வரம் ஆகியவை பட்டப் படிப்பாக நடத்தப்பட்டு வருகின்றன என்று அவா் கூறியுள்ளாா்.