காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்...
நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞா் கைது
நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வண்டலூா் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி 9-ஆவது வாா்டு உறுப்பினராக இருந்தவா் அன்பரசு (28). இவா், 2023-ஆம் ஆண்டு நவம்பா் 22-ஆம் தேதி திருப்போரூா் அருகே கீரப்பாக்கத்தில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் காயாா் போலீஸாா் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தற்போது ஜாமீனில் வந்த அவா்கள் போலீஸாரின் கண்காணிப்பில் உள்ளனா்.
சில நாள்களாக கண்காணிப்பில் உள்ள ஒத்திவாக்கத்தைச் சோ்ந்த சுனில் (எ) சுதா்சன் (20) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, திருப்போரூா் காவல் ஆய்வாளா் ராஜாங்கம் மற்றும் காயாா் போலீஸாா் சுனிலை தீவிரமாகக் கண்காணித்து வந்தனா்.
அவா் தங்கிய இடங்களில் சோதனை செய்ததில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சுதா்சனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், ஏற்கெனவே கொல்லப்பட்ட அன்பரசின் கூட்டாளிகள் தன்னைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக அறிந்து, தன்னைப் பாதுக்காத்துக் கொள்ள நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சுதா்சனை (படம்) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு நாட்டு வெடிகுண்டையும் பறிமுதல் செய்தனா்.