செய்திகள் :

PMK - Ramadoss : ``கலைஞர் பாணி... மூச்சிருக்கும் வரை நானே..!" - ராமதாஸ் பேசியது என்ன?

post image

பாமக-வில் கடந்த சில மாதங்களாகவே நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் அதிகார மோதல் நிலவிக்கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் பா.ம.க சேலம் மாநகர மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான அருள் மற்றும் பா.ம.க கௌரவத் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி ஆகியோர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அன்புமணி நடத்திய பொதுகுழு கூட்டத்தைத் தவிர்க்கவே இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சர்ச்சைக்குரிய பேச்சுகள் எழுந்தன.

அருள், பா.ம.க எம்.எல்.ஏ
அருள், பா.ம.க எம்.எல்.ஏ

நேற்றையதினம் பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அருளுக்கு பா.ம.க இணை பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அன்புமணியின் கூட்டத்தைத் தவிர்பதற்காக மருத்துவமனையில் சேரவில்லை என்று அருள் விளக்கமளித்தார்.

நேற்று மாலை அருள் கவனித்து வந்த சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு க.சரவணன் என்பவரை அன்புமணி நியமித்தார்.

காலையில் அருளை மாநில பொறுப்பில் தந்தை நியமித்த நிலையில், மாலையில் அவரின் மாவட்ட செயலாளர் பதவியில் வேறொருவரை மகன் நியமித்திருப்பது பா.ம.க உள்கட்சி அரசியலை மேலும் பரபரப்பாக்கியது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், "கலைஞர் பாணியில் மூச்சிருக்கும் வரை நானே கட்சியின் தலைவராகப் பணியாற்றுவேன்" என்று கூறியிருக்கிறார்.

தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி போஸ்டர் கிழிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஏதாவது விஷமிகள் செய்திருப்பார்கள். போஸ்டர்களை யார் வேண்டுமானாலும் ஒட்டலாம். ஆனால் கிழிக்கக் கூடாது. அது நாகரீகமறது" என்றார்.

ராமதாஸ்
ராமதாஸ்

நேற்றுமாலை அன்புமணி அருளின் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மற்றொருவரை நியமித்தது குறித்து அருள் பேசுகையில், 'கட்சியில் யாரையும் பதவியில் அமர்த்தவும் நீக்கவும் ஐயா (ராமதாஸ்) ஒருவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது' எனக் கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டபோது,

"அருள் மிகச் சரியாக சொல்லியிருக்கிறார். மாவட்ட செயலாளர் பொறுப்புடன் கூடுதலாக அவருக்கு மாநில அளவிலான இணைச் செயலாளர் பொறுப்பை வழங்கியிருக்கிறோம்" எனப் பதிலளித்தார் ராமதாஸ்.

(இந்த செய்தி குறித்த கூடுதல் விவரங்கள் சிறிது நேரத்தில் இதே பக்கத்தில் தொடர்ந்து சேர்க்கப்படும்)

VCK: "திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால், விசிக அக்கூட்டணியில் இருக்குமா?" - திருமாவளவன் பதில் என்ன?

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச... மேலும் பார்க்க

தூபம் போட்ட மாஜி; யோசனையில் பழக்கட்சி வாரிசு டு புலம்பலில் அதிமுக நிர்வாகிகள் வரை! | கழுகார்

யோசனையில் பழக்கட்சி வாரிசு!“நம்ம பக்கம் வந்துடுங்க...” தூபம் போட்ட மாஜி...‘பழக் கட்சியில் நிலவும் பிரச்னைகள் தேர்தலுக்குள் தீருமா... இலை - மலர் கட்சிகளுடன் கூட்டணியில் சேருமா..?’ என்பதுதான் அரசியலில் ... மேலும் பார்க்க

TVK: "இன்னும் ஒரே மாசத்துல தமிழ்நாடு முழுக்க விஜய் செல்வார்" - சுற்றுப்பயணத்தை உறுதி செய்த ஆதவ்

'கல்லூரி விழா'விஜய் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா என்ற பெயரில் ஜே.பி.ஆர் கல்லூரி சார்பில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தவெக சார்பில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்த... மேலும் பார்க்க