செய்திகள் :

சிபு சோரனை சந்தித்து நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர் முர்மு!

post image

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

81 வயதாகும் சிபு சோரன், கடந்த சில நாள்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. வயது மூப்பால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளுக்காக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட பதிவில்,

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சர் கங்கா ராம் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சோரனின் மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனை அவர் சந்தித்து, அவரது தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின் புகைப்படமும் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

புற்றுநோய் நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சர் கங்கா ராம் புற்றுநோய் மையத்தைத் திறந்து வைப்பதற்காக அவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

இந்த வருகையின் போது, ​​மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது அதிநவீன வசதிகளை முர்மு பார்வையிட்டார். அங்குள்ள நோயாளிகளுடன் உரையாடினார் என்று முர்முவின் அலுவலகம் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SUMMARY

President Draupadi Murmu personally met former Jharkhand Chief Minister and Jharkhand Mukti Morcha party leader Shibu Soren and inquired about his well-being.

ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!

ஹிமாசல பிரதேசத்தின் காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால், வெள்ளம் ஏற்பட்டு 20 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில், நேற்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.குஜராத் மாநிலம்... மேலும் பார்க்க

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்! - மத்திய அமைச்சர் அமித் ஷா

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்... மேலும் பார்க்க

பாராசிட்டமால் 650 வகை மாத்திரைக்கு கர்நாடக அரசு தடை!

பாராசிட்டமால் 650 வகை உள்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று, கடந்த மே மா... மேலும் பார்க்க

அம்புபாச்சி மேளா: 4 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் நடை திறப்பு!

அஸ்ஸாமின் குவாகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா நிறைவையொட்டி காமாக்யா கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல் தகவலைத் தாருங்கள்; விவாதிக்கத் தயார்! காங்கிரஸ் அறிவிப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு விடியோ உள்ளிட்டவைக் கொடுத்தால், தேர்தல் ஆணையத்துடன் விவாதத்துக்குத் தயார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு நடைப... மேலும் பார்க்க