செய்திகள் :

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்! - மத்திய அமைச்சர் அமித் ஷா

post image

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க முன்முயற்சி எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

சில நாள்களுக்கு முன்னதாக, ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என்று தான் கூறியிருந்த கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்றும், மொழிகள் மூலம் பாஜக அரசு இந்தியாவை ஒன்றிணைக்க முயற்சிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவைப் பிரிக்க மொழி ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. அவர்களால் அதை பிரிக்க முடியவில்லை. ஆனால், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவை ஒன்றிணைக்க நமது மொழிகள் ஒரு சக்திவாய்ந்த தளமாக மாறுவதை நாங்கள் உறுதி செய்வோம். இதற்காக, அலுவல் மொழித் துறை செயல்படும்.

பிரதமர் மோடியின் தலைமையில் அமைக்கப்படும் அடித்தளம் 2047-ல் ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்கும். ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்கும் வழியில், நமது இந்திய மொழிகளை வளர்த்து, அவற்றை வளப்படுத்துவோம்.

ஜேஇஇ, நீட், கியூட் போன்ற தேர்வுகள் இப்போது 13 மொழிகளில் நடத்தப்படுகின்றன. முன்னதாக, சிஏபிஎஃப் கான்ஸ்டபிள் வேலைக்கான தேர்வுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், நாங்கள் அதை மாற்றி 13 மொழிகளில் தேர்வை எழுத அனுமதித்துள்ளோம்.

இன்று 95 சதவிகிதத் தேர்வர்கள் தங்கள் தாய்மொழியில் கான்ஸ்டபிள் தேர்வை எழுதுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது வரும் நாள்களில் இந்திய மொழிகளின் எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்பதை நான் மனதார நம்புகிறேன். ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்” என்றார் அமித் ஷா.

Union Home Minister Amit Shah has said that Hindi is a friend of all Indian languages.

இதையும் படிக்க... வெட்கப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன!

பிரதமர் மோடிக்காகவே வாக்களிக்கின்றனர்; சாதிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

பிகாரில் தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்களிக்கப்படுவதாக எழுந்த கருத்துக்கு ஜன் சுராஜ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.பிகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்... மேலும் பார்க்க

ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!

ஹிமாசல பிரதேசத்தின் காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால், வெள்ளம் ஏற்பட்டு 20 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில், நேற்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.குஜராத் மாநிலம்... மேலும் பார்க்க

பாராசிட்டமால் 650 வகை மாத்திரைக்கு கர்நாடக அரசு தடை!

பாராசிட்டமால் 650 வகை உள்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று, கடந்த மே மா... மேலும் பார்க்க

சிபு சோரனை சந்தித்து நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர் முர்மு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 81 வயதாகும் சிபு சோரன், கடந்த சில நாள்களு... மேலும் பார்க்க

அம்புபாச்சி மேளா: 4 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் நடை திறப்பு!

அஸ்ஸாமின் குவாகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா நிறைவையொட்டி காமாக்யா கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா ... மேலும் பார்க்க