செய்திகள் :

பிரதமர் மோடிக்காகவே வாக்களிக்கின்றனர்; சாதிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

post image

பிகாரில் தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்களிக்கப்படுவதாக எழுந்த கருத்துக்கு ஜன் சுராஜ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

பிகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், பிகாரில் தேர்தல்களில் சாதி குறித்த அடிப்படையில் வாக்களிக்கப்படுகிறதா என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து, பிரசாந்த் கிஷோர் கூறுகையில், பிகாரில் மக்களவைத் தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக நிறைய வெற்றிகளைப் பெற்று வருகிறது. பிகாரில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில்தான் வாக்களிக்கின்றனர். பிகாரில் ஒவ்வொரு சாதி அடிப்படையிலும்தான் அரசியலில் வாக்களிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள்.

ஆனால், பிகாரில் மோடியின் சாதியைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று சொல்லுங்கள்? பிகாரில் பிரதமர் மோடியின் சாதியைச் சேர்ந்த யாரும் இல்லை.

இதன் பொருள், மக்கள் தங்கள் சாதியைத் தவிர, பிரதமர் மோடியின் பெயரிலும் வாக்களிக்கின்றனர். இந்து மதம் என்ற பெயரில் ராமர் கோவில், வளர்ச்சிக்காக அல்லது தேசியவாதத்துக்காக அவர்கள் (பாஜகவினர்) எதைச் செய்தாலும், அது வேறு பிரச்னை. ஆனால், அவர்கள் சாதி என்ற பெயரில் அவற்றை செய்யவில்லை.

பிகாரில் எம்-ஒய் (Muslim - Yadav) என்ற வகைப்பாடு இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். லாலு பிரசாத் யாதவ், ஒய் (Yadav) சாதி. ஆனால், அவருக்கு 18 சதவிகித எம் (Muslim) வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் ஏன் லாலுவுக்கு வாக்களிக்கின்றனர்?

அவர்கள் ஒரே சாதி அல்லவே. அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க முடியாது என்பதால், லாலுவுக்கு வாக்களிக்கின்றனர். ஆகையால், சாதி என்பது ஒரு காரணி மட்டுமே; அது மட்டுமே காரணம் அல்ல என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:ரூ. 857 கோடி சம்பளத்தில் செய்யறிவு வேலை! மெட்டா அழைப்பு!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக் தகவல்!

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்திய கடற்படை பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை ... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து 3,400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: வெளியுறவுத் துறை!

"ஆபரேஷன் சிந்து" மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரானிலிருந்து சுமார் 3,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடை... மேலும் பார்க்க

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்!

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, ... மேலும் பார்க்க

அடுத்தக்கட்ட வர்த்தக பேச்சு! வாஷிங்டன் சென்றடைந்த இந்திய குழு!

அமெரிக்காவுடனான அடுத்த சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைக்காக, ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழுவொன்று அந்நாட்டு தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான, வர்த்தக பே... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் அதிரடி நடவடிக்கை! ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில், ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உதம்பூர் மாவட்டத்தின் பிஹாலி பகுதியில், கடந்த ஓராண்டுக்கு மேலாகத் த... மேலும் பார்க்க

ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!

ஹிமாசல பிரதேசத்தின் காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால், வெள்ளம் ஏற்பட்டு 20 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில், நேற்... மேலும் பார்க்க