செய்திகள் :

குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்யம் - என்ன நடந்தது?

post image

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் பினாங்கோடு பகுதியில் உள்ள மக்கள் ஒரு பூனைக்குட்டியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மூன்று நாள்களுக்கு முன்பு குரங்கு ஒன்று பினாங்கோடு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.

வீட்டில் வளர்த்த 20 நாள்களேயான பூனை குட்டி ஒன்றை அந்த குரங்கு தூக்கிச் சென்றது. இதனால் இந்த குட்டியின் தாய் பூனை அழுகையுடன் சத்தத்தை எழுப்பி குடும்பத்தினரை எச்சரித்துள்ளது.

பூனை தொடர்ந்து சத்தம் போடுவதை குடும்பத்தினர்கள் கவனித்து வெளியில் வந்து பார்த்தபோது, குரங்கு கையில் அந்த பூனை குட்டி இருந்துள்ளது. அந்த குரங்கை பார்த்தப்படி தாய் பூனை அழுது சத்தமிட்டிருந்திருக்கிறது.

மக்கள் சுற்றி திரண்டதால், குரங்கு ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு நகரத் தொடங்கியது. ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு தாவும் குரங்கை பார்த்து தாய் பூனை சத்தமாக அழுது கொண்டிருந்திருக்கிறது.

பூனை குட்டியை மீட்க கிராம மக்கள் பல முயற்சிகளை செய்துள்ளனர். பசி மற்றும் மழையில் நனைந்ததால் பூனை குட்டி அழும் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் தன்னார்வலர்கள் தலைமையில் மீட்பு முயற்சிகளும் மணிக்கணக்கில் நடந்துள்ளது.

ஆனால் குரங்கு மேலும் மேலும் கிளைகளை அடைந்ததால் அதனை பிடிக்க முடியவில்லை, பூனை குட்டியை மீட்க முடியவில்லை.

குடியிருப்பாளர்கள் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கிய போதிலும், குரங்கை அப்பகுதியில் காணவில்லை. எனினும் பூனை குட்டி திருப்பி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் கிராமவாசிகள் தற்போது காத்துக்கொண்டிருக்கின்றனர்.

”வகுப்பறை, சீருடை இல்லை.. உலகம்தான் பாடம்” - பள்ளிக்கு செல்லாமல் பயணம் செய்யும் குழந்தைகள் - ஏன்?

"வகுப்பறை இல்லை, சீருடை இல்லை, தினமும் பள்ளி செல்ல வேண்டியதில்லை... உலகம் மட்டுமே அவர்களின் பாடம்" என்று தங்களின் மூன்று பெண் குழந்தைகளை வழக்கமான கல்வி பயிலும் நிலையில் இருந்து மாற்றியுள்ளனர் அமெரிக்க... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்; விரட்டிப் பிடித்த அதிகாரிகள் - 15 ரயில்களின் சேவை பாதிப்பு!

ரயில்கள் பல கிலோமீட்டர் தூரத்தில் வந்தாலே ரயில்வே லெவல் கிராசிங்கை மூடிவிடுவது வழக்கம். ஆனால் தெலங்கானாவில் ஒரு பெண் செய்த காரியம், ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள ரங்கா ... மேலும் பார்க்க

கூமாபட்டி: `ஏங்ங்ங்க... ரீல்ஸை நம்பி வந்துராதீங்க!' - எச்சரிக்கும் அதிகாரிகள்.. பின்னணி என்ன?

கடந்த சில தினங்களாக இன்ஸ்டா கிராம், யூடியூப், எக்ஸ் என எந்த சமூக வலைதளத்தைத் திறந்தாலும் " ஏங்ங்ங்க... கூமாபட்டிக்கு வாங்க" என்று அழைக்கும் இளைஞரின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.மன அழுத்தமா கூமாபட்டிக... மேலும் பார்க்க

Rolls Royce: 1 வயது மகளுக்கு ரூ.5 கோடிக்கு கார் பரிசு; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒரு வயது மகளுக்கு ஐந்து கோடி மதிப்புள்ள ஆடம்பர காரை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சதீஷ் சன்பால் தன... மேலும் பார்க்க

"நான் அமன் சொத்து; என்னைத் தொட்டால் வெட்டுவேன்" - முதலிரவில் கத்தியைக் காட்டி கணவனை மிரட்டிய மனைவி

உத்தரப் பிரதேசத்தில் முஸ்கான் என்ற பெண் தனது கணவனைக் காதலன் துணையோடு கொலை செய்து உடலை ஊதா கலர் டிரம்மில் சிமெண்ட் போட்டு வைத்தார்.சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி தேனிலவுக்... மேலும் பார்க்க

`இருமனைவி இருக்கிறது என்பதற்காக தேர்தல் வெற்றியை ரத்துசெய்ய முடியாது!’ - மும்பை ஹைகோர்ட்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜேந்திர காவிட். பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராஜேந்திர காவிட் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனக்கு இரண்டு மனைவி இருப்பதை குறி... மேலும் பார்க்க