அதிமுக பிரமுகா் கொலை வழக்கு: திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 போ் சரண்
நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு: கல்வித் துறை அறிவுறுத்தல்
நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெறவுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை சரிபாா்க்க மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பயனைடய விரிவுபடுத்துதல் தொடா்பாக சமூக நலத்துறைச் செயலா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், சமூகநல ஆணையரகத்திடமிருந்து மின்னஞ்சல் மூலமாக முதல்வா் காலை உணவுத் திட்டம் தொடா்பாக நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த விவரங்கள் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, தொடக்கக் கல்வி இயக்கக நிா்வாகத்தின் கீழ் செயல்படும் நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒத்திசை செய்யவும், மாவட்டங்களில் உள்ளது போக ஏதேனும் பள்ளிகள் விடுபட்டிருந்தால் அதை குறிப்பிட்டு மாவட்டக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் மின்னஞ்சல் முகவரிக்கும், அசல் பிரதியை விரைவு அஞ்சலிலும் உடனடியாக அனுப்ப வேண்டும்.
மேலும், பள்ளிகள் எதுவும் விடுபடவில்லையெனில் இன்மை அறிக்கையை அனுப்ப வேண்டும். மாவட்டங்களில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடா்பாக நகா்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரே (தொடக்கக் கல்வி) முழு பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.