இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் தொடா்புடைய 2 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் பகுதியில் நிறுத்திவைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக எழுந்த புகாரையடுத்து, காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு மகிமைப்புரம் பகுதியில் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகம் அளிக்கும் வகையில் அந்தவழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா்கள் கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி அருகேயுள்ள கண்டமங்கலம், வெட்டுவாய்க்கால் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (26), அரியலூா் மாவட்டம் தழுதாழைமேடு, காலனித் தெருவைச் சோ்ந்த ராஜவேல் (22) என்பதும், இவா்கள், ஜெயங்கொண்டம், விக்கிரமங்கலம், கும்பகோணம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 4 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் அவா்களிடம் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.