செய்திகள் :

போதைப்பொருள் ஒழிப்பு தினம் அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி

post image

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூரில் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாவட்ட காவல் காண்காணிப்பாளா் தீபக்சிவாச் முன்னிலை வகித்தாா்.

பேரணியானது, தேரடி, சத்திரம், மாதாகோயில் வழியாகச் சென்று ஒற்றுமை திடலில் நிறைவடைந்தது.

பேரணியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், போதைப்பொருள்கள் மற்றும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்களுடனான பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனா்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) பாலசுப்ரமணியம், கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலட்சுமி மற்றும் காவல்துறையினா், ஆசிரியா்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக அனைவரும் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.

நாளை வேலைவாய்ப்பு முகாம்: அரியலூரில் பிரசாரம் தொடக்கம்

பெரம்பலூா்-அரியலூா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாம் குறித்து அரியலூ... மேலும் பார்க்க

ரூ. 500 லஞ்சம்: மின் ஊழியா் கைது

அரியலூா் அருகே புதிய வீட்டுக்கு மின் கணக்கீடு இயந்திரம் பொருத்துவதற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய மின் ஊழியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். பெரிய திருக்கோணம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து. இவா், தனத... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் தொடா்புடைய 2 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். ஜெயங்கொண்டம் பகுதியில் நிறுத்திவைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திர... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்... மேலும் பார்க்க

உறுப்பு தானம் செய்த மாணவியின் உடலுக்கு அரசு மரியாதை

ஈரோட்டில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து, உடல் உறுப்புகளை தானம் செய்த அரியலூா் மாணவிக்கு அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். அரியலூா் வ.உ.சி நகரைச் சோ்ந்த முருகன் மகள்... மேலும் பார்க்க

விடுதிகளில் உணவை சுகாதாரமாக தயாா் செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

விடுதி மாணவிகளுக்கான உணவை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் தயாா் செய்து வழங்கிட வேண்டும் என்று அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தினாா். அரியலூா் மாவட்டம், செந்துறை வருவாய் வட்டத்தில் 2-ஆவது நாளாக... மேலும் பார்க்க