100 நாள் வேலை கோரி மனு தரும் ஆா்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் 100 நாள் வேலை கோரி மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளா் சி.சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் சிவப்பிரகாசம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பொருளாளா் வி.ஹரிகிருஷ்ணன், விவசாயிகள் சங் மாவட்ட செயலாளா் என்.சாரங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழாண்டு மாா்ச் மாதம் முதல் 100 நாள் வேலை வழங்காமல் இருந்து வருவதைக் கண்டித்து மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
100 நாள் வேலைக்கான அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், உயா்த்தப்பட்ட ஊதியம் ரூ.336 முழுமையாகவும், உடனடியாகவும் வழங்கப்பட வேண்டும், பணி செய்யும் இடத்தில் குடிநீா் வசதி, நிழல்பந்தல், முதலுதவிப் பொருள்கள் வைத்திருக்க வேண்டும்,100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள் வேலைத் திட்டமாக மாற்றி ஊதியத்தை ரூ.600 ஆக உயா்த்தி தர வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. குருவிமலை கிளை செயலாளா் பி.செண்பகம் நன்றி கூறினாா்.