செய்திகள் :

`2024 T20 WC பைனலில் அவரைப் பெரிதாக யாரும் பேசுவதில்லை’ - நோ கோலி, பும்ரா; ரோஹித் கூறும் வீரர் யார்?

post image

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023-ல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அடுத்த ஆண்டே, டி20 உலகக் கோப்பையை வென்றது.

அந்த இறுதிப்போட்டியில் கடைசி 24 பந்துகளில் வெறும் 26 ரன்கள் எடுத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி என்று கைவிட்டு போன ஆட்டத்தை இந்தியா வென்றது இன்றும் ஒரு மேஜிக் தருணமாகத்தான் இருக்கிறது.

அதைத் தனது பவுலிங்கால் சாத்தியமாக்கியது பும்ரா.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

ஆனாலும், முதலில் பேட்டிங் செய்யும்போது 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்த நேரத்தில் தனியாளாக நின்றுகொண்டிருந்த கோலியைப் பார்க்க வைத்து அக்சர் படேல் ஆடிய அதிரடி இன்னிங்ஸ் பும்ராவின் பவுலிங்கிற்கு சற்றும் குறைவில்லாதது.

இந்த நிலையில், அந்த இறுதிப்போட்டியில் ஆட்டத்தை மாற்றியமைத்தது அக்சர் படேல்தான் என்று ரோஹித் சர்மா புகழ்ந்திருக்கிறார்.

அக்சர் படேலின் இன்னிங்ஸைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை!

ஜியோ சினிமாவுடனான நிகழ்ச்சியொன்றில் 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி குறித்து பேசிய ரோஹித் சர்மா, "அப்போது நான் சற்று பதட்டமானேன்.

இந்தியாவுக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடிய அனுபவம் உதவவும். இந்த நிலையில் உங்களின் எமோஷன்ஸ் மற்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

இன்று நான் கவனமாக இருக்க வேண்டிய நாள். நிச்சயம் கோலியும் இதைத்தான் நினைத்திருப்பார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

இதற்கு முன் என நடந்தது என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகள் போனதும் டிரஸ்ஸிங் ரூமில் நிறைய பதட்டங்கள் இருந்தன.

ஆனால், கோலி ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார் (76 ரன்கள் அடித்திருந்தார்).

அதேசமயம், அக்சர் படேலின் இன்னிங்ஸைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை.

அக்சர் படேல்
அக்சர் படேல்

ஆனால், அதுதான் ஆட்டத்தை மாற்றிய தருணம். அந்த நேரத்தில் அவர் 31 பந்துகளில் 47 ரன்கள் அடித்தது மிக முக்கியமானது.

மறுபுறம், இன்னிங்ஸை முழுமையாகக் கொண்டுசெல்ல ஒருவர் எங்களுக்குத் தேவைப்பட்டார்.

விராட் அதை அற்புதமாகச் செய்தார். நாங்கள் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்ததன் மனவேதனையை நாங்கள் அனுபவித்திருக்கிறோம்.

எனவே, நாங்கள் கவனமாகத் திட்டமிட்டு உலகக் கோப்பையை எப்படி வெல்வது என்று தொடர்ந்து யோசித்து, ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்தோம். அதனால்தான் இது ஸ்பெஷலாக இருக்கிறது." என்று கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``தேவைப்படும்போது வீட்டுக்கே வந்து அழைப்பார்கள்" 2015-ல் பயிற்சியாளரிடம் ரிஷப் பண்ட் சொன்ன பதில்

இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இப்போட்டியில் இந்திய ... மேலும் பார்க்க

TNPL 2025: பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் | Photo Album

TNPL-2025:நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்... 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" - கவாஸ்கர் அறிவுரை என்ன?ச... மேலும் பார்க்க

Rishabh Pant: ``20 முறை அவுட்டாகப் பார்த்தார்'' - துணிச்சலான பேட்டிங் ஸ்டைல் குறித்து ஏபிடி ஓபன்!

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தன்னைச் சிறந்த பேட்ஸ்மேனாக நிலை நிறுத்தியுள்ளார் இந்தியாவின் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டி... மேலும் பார்க்க

"தவறான நண்பர்கள்; குடும்பப் பிரச்னை; அப்பாவின் வார்த்தை..." - தன்னிலை உணர்ந்து வருந்தும் பிரித்வி

இந்திய கிரிக்கெட்டில் சேவாக்கை போல ஒரு முத்திரை பதிப்பார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா.2018-ல் 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி சாம்பிய... மேலும் பார்க்க

ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்... 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" - கவாஸ்கர் அறிவுரை என்ன?

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், பிட்ச் பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைத்தும், 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்திருக்கிறது இந்தியா.148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு போட்டியில... மேலும் பார்க்க

TNPL-2025: சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றி| Photo Album

TNPL-2025: மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றி.! மேலும் பார்க்க