செய்திகள் :

Rishabh Pant: ``20 முறை அவுட்டாகப் பார்த்தார்'' - துணிச்சலான பேட்டிங் ஸ்டைல் குறித்து ஏபிடி ஓபன்!

post image

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தன்னைச் சிறந்த பேட்ஸ்மேனாக நிலை நிறுத்தியுள்ளார் இந்தியாவின் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டி போல அதிரடியாக விளையாடும் பண்டின் பேட்டிங் ஸ்டைல் கிரிக்கெட் வட்டாரத்தில் எப்போதும் பேச்சுபொருளாக இருக்கும்.

pant
pant

இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ்.

மைதானத்தில் பிரிட்டிஷ் ரசிகர்களையும் கூட உற்சாகப்படுத்தும் பண்டின் அச்சமற்ற அணுகுமுறைதான் அவரது வெற்றிக்கு வழிவகுக்கிறது என்பதையும் ஏபிடி ஒப்புக்கொண்டுள்ளார்.

"பண்ட் அதீத ரிஸ்க் எடுத்து விளையாடுகிறார். இது சில நேரங்களில் உங்களை மிகவும் எரிச்சலடையச் செய்யும். இரண்டு இன்னிங்ஸிலும் அவர் 30 ரன்களுக்கு உள்ளாகவே அவுட் ஆகியிருக்கக் கூடிய 20 இடங்களை என்னால் கணிக்க முடிந்தது. ஆனால் அவர் அவுட் ஆகவில்லை, அதுதான் முக்கியம்!

அவர் எதிரணியை நேருக்கு நேராக எதிர்கொள்கிறார். இப்படி விளையாடுபவர்கள் 100-க்கு 99 முறை வெற்றிகரமான வீரர்களாக இருப்பார்கள்" எனத் தனது யூடியூப் சானலில் பேசியுள்ளார் டிவில்லியர்ஸ்.

மேலும் டிவில்லியர்ஸ், "பண்ட் ஆட்டநாயகன் விருதுக்குத் தகுதியானவர். ஆனால் இந்தியா வெற்றிபெறாதது ஒரு அவமானம்" என்று கூறியுள்ளார்.

AB de Villiers
AB de Villiers

அத்துடன் இந்திய அணியில் மாற்றம் வேண்டும் என மீடியாக்களில் எழுதப்படுவது குறித்து, "இந்தியா பதட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை, இது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் சீரிஸ்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த போட்டிகளிலும் பண்டின் பல்டிகளைப் பார்ப்போம் என நம்பிக்கைக்கொள்வோம்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"தவறான நண்பர்கள்; குடும்பப் பிரச்னை; அப்பாவின் வார்த்தை..." - தன்னிலை உணர்ந்து வருந்தும் பிரித்வி

இந்திய கிரிக்கெட்டில் சேவாக்கை போல ஒரு முத்திரை பதிப்பார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா.2018-ல் 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி சாம்பிய... மேலும் பார்க்க

ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்... 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" - கவாஸ்கர் அறிவுரை என்ன?

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், பிட்ச் பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைத்தும், 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்திருக்கிறது இந்தியா.148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு போட்டியில... மேலும் பார்க்க

TNPL-2025: சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றி| Photo Album

TNPL-2025: மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றி.! மேலும் பார்க்க

`டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான சாதனை டு ரூட்டின் யுனிக் சாதனை' - ENG vs IND போட்டி சாதனைகள்

இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹெடிங்லி மைதானத்தில் ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.முதல் இன்ன... மேலும் பார்க்க

BCCI: இந்திய அணியில் இடம்பெற ஐபிஎல் தான் அளவுகோலா? புறக்கணிக்கப்படும் உள்ளூர் வீரர்கள்! | In Depth

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த தசாப்தத்துக்கான பரீட்சார்த்த முயற்சியின் ஒரு அணியாகத்தான் இங்கிலாந்தில் களமிறங்கியிருக்கிறது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி.வழக்கமாக ஒரு தொடருக்கு முன்பு அதற்கா... மேலும் பார்க்க