செய்திகள் :

இந்தியா - ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

post image

இந்தியா - ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வருகிற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 25 ஆம் தேதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் அடிலைடு மற்றும் சிட்னியில் முறையே நடைபெறுகின்றன. அதன் பின், அக்டோபர் 29 முதல் டி20 தொடர் தொடங்குகிறது.

விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடர் தொடங்குவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில், போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த இரண்டு தொடர்களையும் சேர்த்து, 8 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளுக்கு 90,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும், சிட்னியில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் கேன்பெராவில் நடைபெறும முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு விற்பனையான மொத்த டிக்கெட்டுகளில் 16 சதவிகித டிக்கெட்டுகளை இந்திய ரசிகர் மன்றங்கள் வாங்கியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

India's white-ball tour of Australia is still four months away but Cricket Australia (CA) has already more than 90,000 tickets for eight matches with third ODI in Sydney and first Twenty20 in Canberra completely sold out.

இதையும் படிக்க: இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம்..! மீண்டும் சதமடித்த பதும் நிசாங்கா!

இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்ப்பு; இந்திய அணிக்கு ஆபத்தா?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகி... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்டில் எங்கு தவறு செய்தது இந்திய அணி? அஸ்வின் கூறுவதென்ன?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட... மேலும் பார்க்க

இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம்..! மீண்டும் சதமடித்த பதும் நிசாங்கா!

இலங்கை கிரிக்கெட் வீரர் பதும் நிசாங்கா வங்கதேசத்துக்கு எதிராக மீண்டும் சதம் அடித்து அசத்தினார். பதும் நிசாங்கா (27 வயது) கடந்த 2021 முதல் இலங்கை அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 18 டெஸ்ட... மேலும் பார்க்க

அதிக அரைசதங்கள்: ஜோ ரூட் சாதனை!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜோ ரூட் (34 வயது) 2012 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை, 154 ... மேலும் பார்க்க

மாவட்ட கல்வி அதிகாரியாகும் ரிங்கு சிங்: 8-ஆம் வகுப்பு படித்தவருக்கு இந்தப் பதவியா?

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உ.பி. மாவட்ட கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 27 வயதாகும் ரிங்கு சிங் ஐபிஎல் தொடரில் 5 சிக்ஸர்கள் அடித்து புகழ்பெற்றார். பின்னர், இந்திய... மேலும் பார்க்க

அப்படி என்ன வன்மம்? ஆஸி. அணிக்கு எதிராக மிரட்டும் ஷமர் ஜோசப்!

ஆஸி. அணிக்கு எதிராக மட்டும் அசத்தலாக பந்துவீசும் மே.இ.தீ. அணி வீரர் ஷமர் ஜோசப் பேசுபொருளாக மாறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியும் ஆஸி. அணியும் பாரபடோஸ் திடலில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியி... மேலும் பார்க்க