குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்...
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவைக் கைதுசெய்த போலீஸ்!
போதைப்பொருள் வைத்திருந்ததாக கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23), நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
இதே வழக்கு தொடர்பாக, நடிகர் கிருஷ்ணாவையும் போலீசார் தேட, அவர் தலைமறைவாகி இருந்தார். இவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணா, கெவின் என்பவரிடம் இருந்து போதைப்பொருள்கள் வாங்கி, நண்பர்களுக்கும் கொடுத்ததாகவும் தெரிகிறது. கெவினும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் இருக்கும் இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களையும் அது குறித்த வாட்ஸ்ஆப் குழுக்களில் இணைந்து கிருஷ்ணா பகிர்ந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வங்கி பணப்பரிவர்த்தனைகள், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள், விசாரணை சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை வைத்து கிருஷ்ணா மற்றும் கெவின் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை வைத்திருப்பது, பயன்படுத்துவது, கடத்துவது, பகிர்வது என அனைத்துமே சட்டப்படி குற்றமாகும். இது குறித்த தகவல்களை மறைப்பதுமே குற்றம்.
இன்னும் இந்த வழக்கில் பல நடிகர்கள், நடிகைகள் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.