செய்திகள் :

மதுபோதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் 4 பேர் மீது நடவடிக்கை!

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம். மேலும் முக்கிய நாட்களில் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் குத்துவிளக்கு பூஜை நடத்துவது மட்டுமின்றி தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பெரிய மாரியம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.

மதுபோதையில் நடனம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோயில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் ஜூலை 2-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறு உள்ளது. இதற்காக, கடந்த 16-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பெரிய மாரியம்மனுக்கு பூஜை மற்றும் அர்ச்சனை செய்யும் கோமதிவிநாயாகம், வினோத், கணேசன் உள்ளிட்ட அர்ச்சகர்கள் அரசால் நியமிக்கப்படாதவர்கள். இவர்களாக கோயில் உழவாரப்பணி, தொண்டு என செய்யத் துவங்கி தற்போது கோயிலில் பூஜை மற்றும் அர்ச்சனைகளை செய்து வருகிறார்கள்.

பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து அர்ச்சகர்கள் மது அருந்துவதாகவும், கோயிலுக்கு வரும் சில பெண்களிடம் திருநீரை மொத்தமாக அவர்களது மூஞ்சியில் அள்ளிப் போடுவது எனவும் அத்துமீறி நடந்து கொள்வது என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்த தவறுகள் எல்லாம் பேசு பொருளாகவே இருந்த நிலையில் மதுபோதையில் கோயில் சம்பந்தப்படாத ஒரு இடத்தில் வைத்துஆபாச நடனம் ஆடும் வீடியோ சமூக வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரிய மாரியம்மன் கோயில்

அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன் மீது கோமதிவிநாயகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சபரிநாதன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதனையடுத்து நேற்று பெரிய மாரியம்மன் கோயில் தக்காரும், ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஆகியோர் ஆண்டாள் கோயில் அலுவலகத்தில் வைத்து கோயில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பெண் பக்தை மீது அத்துமீறல்

இப்படி ஒரு புறம் இருக்க இதற்கு முன்னர் இந்து முன்னணி சார்பில் தக்காரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ஜூன் 15-ந் தேதி பெரிய மாரியம்மன் கோயிலில் அரசால் நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர் சுந்தர் மது அருந்திவிட்டு பணி செய்தது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதியாகிதாக கூறப்படுகிறது.

கும்பாபிஷேகத்திற்கு பின் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை

பெரிய மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமியிடம் கேட்டபோது, “ உதவி அரச்சகர் கோமதி விநாயகம் உள்ளிட்ட 4 பேரும் அரசு பணியாளர்கள் இல்லை. நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்தில் இவர்களையும் பயன்படுத்தாமல் வேர் அர்ச்சகர்களை வைத்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு கோயில் பூஜை விவகாரங்களில் தலையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோயிலில் தவறு நடைபெறுவதாக கூறப்படும் புகார்களுக்கும் விசாரணையை நடத்த உள்ளோம். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அர்ச்சகர் சுந்தர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

பெண் பக்தை மீது அத்துமீறல்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு!

பெரிய மாரியம்மன் கோயிலின் உதவி அர்ச்சகர்கள் கோமதி விநாயகம், கணேசன், வினோத் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தி ஆபாசமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இன்று 3 அர்ச்சர்கள் மீதும் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த மகன்

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒரு மகனும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகன், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ... மேலும் பார்க்க

திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் வீச்சு

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முகமது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதன்கிழ... மேலும் பார்க்க

`இப்படியெல்லாம் நடக்குமா?' - திருமணமான ஒரே மாதத்தில் சடலமான கணவன் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

ஆந்திரா மாநிலம் கர்னூலைச் சேர்ந்த ஐஸ்வர்யா (23) என்பவருக்கும் தெலுங்கானாவின் கட்வாலிலை சேர்ந்த தேஜேஸ்வர் (26) என்பவருக்கும் மே -18 அன்று திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்துக்குப் பிறகு இருவ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: வீடு புகுந்து திருட்டு; வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவிச் சென்ற திருடர்கள்

ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த வாரம் கோயம்புத்தூரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதையடுத்து தான் ஊரில் இருந்த... மேலும் பார்க்க

`ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரம்..' - பெற்ற தாயை கொன்ற மகன்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ரக்‌ஷனா(35). இவரது கணவர் கடந்த சில வருங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். மூத்த மகனுக்கு 17 வயதாகிறது. இரண்... மேலும் பார்க்க

ரூ.4 கோடி சொத்து பத்திரங்களை கோயில் உண்டியலில் போட்ட தந்தை... கொந்தளிக்கும் மகள்கள் - நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகிலுள்ள படவேடு கோணையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன் (வயது 65). இவரின் மனைவி கஸ்தூரி, அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர்... மேலும் பார்க்க