போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது!
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவையும் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலமாக கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.
மேலும், இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், அவா் கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா். மேலும், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தனிப்படையினா் கிருஷ்ணாவை தேடி கேரளத்துக்கு சென்றனா். இந்நிலையில், அவா் தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீஸாா் முன் புதன்கிழமை நண்பகல் ஆஜரானாா். போலீஸாா் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விடியவிடிய விசாரணை நடத்தினர்.
தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது என்றும் இதய நோயாலும், இரைப்பை பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக கிருஷ்ணா வாக்குமூலம் அளித்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையிலும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரின் வீட்டில் இன்று காலை முதல் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கைதானவர்களுடன் கிருஷ்ணாவில் செல்போன் உரையாடலை ஆய்வு செய்யத் தொடங்கினர்.
இதில், கிருஷ்ணாவும் கைதானவர்களும் மறைமுக வார்த்தைகளால் (கோட் வேர்டு) பேசிக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவையும் சென்னை போலீசார் கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Summary
Chennai police have also arrested actor Krishna in a drug case.