செய்திகள் :

தடுப்பூசி போடுவதில் தயக்கம்! கோடிக்கணக்கான குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து!

post image

உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டம் குறைந்து விட்டதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகளவில் பணக்கார மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உலகளவில் 1974 ஆம் ஆண்டுமுதல் 400 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதன் மூலம், 15 கோடி உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. 2023 ஆண்டுவரையிலான அரை நூற்றாண்டில் தடுப்பூசி பாதுகாப்பு இரட்டிப்பாகியுள்ளது.

ஆனால், 2010 முதல் தடுப்பூசி பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், தேக்க நிலையில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, கடந்த 20 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது. இது, கரோனா தொற்றுக் காலத்தில் மிகவும் மோசமடைந்துள்ளது.

இந்த அலட்சியத்தால் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு தட்டம்மை, காசநோய், போலியோ, தொண்டை அழற்சி போன்ற நோய்களும் ஏற்படும் ஆபத்தில் உள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பணக்கார நாடுகளில் தடுப்பூசி விகிதங்கள் குறைந்த நிலையில், சுமார் 100 நாடுகளில் தட்டம்மை தடுப்பூசிகள் குறைந்து விட்டதாக மருத்துவ இதழான தி லான்செட்டின் ஆய்வு கூறுகிறது.

2023 ஆம் ஆண்டுகாலத்தில், துணை சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் மட்டும் குழந்தைப் பருவத் தடுப்பூசிகள் இல்லாமல், 1.6 கோடி குழந்தைகள் இருந்துள்ளனர்.

இந்த நிலைமையே தொடர்ந்தால், அதிகமான குழந்தைகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நிரந்தர பாதிப்புக்குள்ளாவதுடன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களால் இறப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

உலகளவிலான உள்நாட்டு அமைதியின்மை, போர்கள், வெளிநாட்டு உதவிகளைக் குறைக்கும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்றவற்றாலும் தடுப்பூசிகள் பெறுவது கடினமாகிறது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பெற்றோர்கள் தயங்குவதைத் தடுக்கவும், தடுப்பூசி குறித்த தவறான வதந்திகளை விவரிக்கவும் ஆரம்ப சுகாதார அமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிக்க:ரூ. 857 கோடி சம்பளத்தில் செய்யறிவு வேலை! மெட்டா அழைப்பு!

விண்வெளி மையத்தில் சுபான்ஷு சுக்லா! அவரின் முதல் உரை என்ன தெரியுமா?

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா முதல் முறையாக உரையாற்றினார். அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ தி... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! ஒரே நாளில் 30,000 பேர் தாயகம் திரும்பினர்!

ஈரான் நாட்டிலிருந்து ஒரே நாளில் 30,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மற்றும் நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில், அந்ந... மேலும் பார்க்க

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்க..! - டிரம்ப் வேண்டுகோள்

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.2019 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது லஞ்சம், ஊழல், நம்பிக்கை மீறல், மோசடி உள்ளிட்ட பிரிவுகள... மேலும் பார்க்க

சீனாவில் வாகனம் மோதி பள்ளிக் குழந்தைகள் படுகாயம்! மீண்டும் கார் தாக்குதலா?

சீனாவின் பெய்ஜிங் புறநகர் மாவட்டத்திலுள்ள, தொடக்கப் பள்ளியின் அருகில் குழந்தைகள் மீது ஒருவர் காரால் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெய்ஜிங் மாகாணத்தின் மியூன் மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளி அருகில... மேலும் பார்க்க

அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது: முதல்முறையாக கமேனி பேச்சு!

இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு முதல்முறையாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி முதல்முறையாக பொது அறிக்கை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்தார் சுபான்ஷு சுக்லா!

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழுவினர் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக டிராகன் விண்கலத்தை இணைத்து புதிய சாதனையும் படைத்துள்ளார்.... மேலும் பார்க்க