குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்...
3BHK: `என்னோட மனைவி, சொந்த வீடு இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க..!' - மாரி செல்வராஜ்
'எட்டுத் தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '3BHK'.
இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அருண் விஷ்வா இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் ராம், மாரிசெல்வராஜ், ரவிமோகன், 'டூரிஸ்ட் ஃபேமிலி' அபிஷன் ஜீவிந்த், 'கொட்டுக்காளி' வினோத்ராஜ், 'அயலான்' ரவிக்குமார், 'அயலி' முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் பேசியிருக்கும் இயக்குநர் மாரிசெல்வராஜ், "ராம் சாரோட இயக்கத்தில் சித்தார்த் சாரோட நடிப்பில் ஒரு படம் பண்ணலாம்னு இருந்தோம். சித்தார்த் சார் பாடிக்கொடுத்த 10 பாடல்கள்கூட ரெடி ஆகிடுச்சு. அந்தப் படத்துக்காக நல்ல இடங்கள் பார்க்க நானும், ராம் சாரும் ஊட்டி மலையோட மூலைமுடுக்கெல்லாம் சுத்தினோம். மலை உச்சியில ஒரு பள்ளத்தாக்க பார்ப்பதற்காகப் போனோம்.
ராம் சார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் நடக்கவில்லை
அந்தப் பள்ளத்தாக்கப் பார்க்க மலை உச்சியில பல மணிநேரம் காத்திருந்தோம். ஆனால், அந்தப் பள்ளத்தாக்கப் பார்க்க முடியாம திரும்பி வந்துட்டோம். அந்தப் படத்தையும் பண்ண முடியாம திரும்பிட்டோம். ஒருநாள் அந்தப் படம் நடக்கும்னு நம்புறேன்.
படம் பார்த்து என் மனைவி அழுதுட்டாங்க
இந்தப் படம் பார்த்து என் மனைவி அழுதுட்டாங்க. நான் பிறக்கும்போது எனக்கு சொந்தமாக ஒரு ஓட்டு வீடு இருந்தது. ஆனால், என் மனைவி பிறக்கும்போது அவங்களுக்குச் சொந்த வீடு இல்லை. நாங்கள் காதலிக்கும்போது நிறைய முறை வீட்ட மாத்தியிருக்காங்க.
`ஒரு பையன் அடிக்கடி வீட்டுக்கு வரான். அதுனால ஓனர் காலி பண்ண சொல்லிட்டாங்க' அப்டினு நான் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போகிறனால பல முறை வீட காலி பண்ணியிருக்காங்க.
அப்படி பலமுறை அவங்களோட சேர்ந்து வீடு தேடி அலைந்திருக்கிறேன். 'பரியேறும் பெருமாள்' படம் ரிலீஸானதுக்கு அப்புறம்கூட சேலத்துல வீடு தேடி அலைஞ்சிருக்கேன். சென்னை வந்ததுக்கு அப்றம்கூட வீடு தேடி அலைஞ்சிருக்கோம்.

எனக்கு சொந்த வீடு பற்றிய கவலையே இல்லை. ஆனால், என் மனைவி, 'சொந்த வீடு இல்லை, சொந்த வீடு இல்லை' என அடிக்கடி வருத்தப்படுவாங்க.
எனக்கு சமூகத்தைப் பற்றியக் கனவுதான். அவங்களுக்குச் சொந்த வீட்டைப் பற்றிதான் கனவு. 'கர்ணன்' படம் முடிச்சிட்டு ஒரு சொந்த வீடு வாங்கினோம்.
'3BHK' படம் பார்த்துட்டு என் மனைவி ரொம்ப அழுதாங்க. 'இந்தப் படத்துல அப்பா, அம்மா இருக்காங்க. எனக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும் வச்சிட்டு சொந்த வீடு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்'னு சொன்னங்க. அந்த அளவிற்கு இந்தப் படம் அவங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துச்சு." என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...