செய்திகள் :

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்!

post image

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகள், தேர்தல் விதிகளை மீறியதாகக் கூறி, அவற்றை பட்டியலில் இருந்து நீக்குவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தக் கட்சிகள், 2019 ஆம் ஆண்டுமுதல் 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில்கூட போட்டியிடவில்லை.

இந்தக் கட்சிகளின் அலுவலகங்களும் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் இருப்பதாகத் தெரியவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. மேலும், தற்போது பதிவு செய்யப்பட்ட 2,800-க்கும் மேற்பட்ட அடிப்படை நிபந்தனையை பூர்த்திசெய்யத் தவறியதாகக் கூறியது.

இந்தக் கட்சிகளின் பதிவுகளை நீக்கத்திற்கான விளக்கக் கேட்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விளக்கத்துக்கு 21 நாள்களுக்குள் பதில் தரவில்லையென்றால், அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும்.

இந்த பட்டியல் நீக்க நடவடிக்கையானது, அரசியல் பதிவை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும், அரசியல் செயல்முறையில் அதிக வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறலையும் கொண்டுவரப் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 18.9 லட்சம் நிறுவனங்கள்: மத்திய அரசு தகவல்

மே மாத நிலவரப்படி 18.9 லட்சம் நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் இவை மொத்தமாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் 65 சதவீதம் எனவும் மத்திய அரசின் அதிகாரபூா்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. மே... மேலும் பார்க்க

‘பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறாா்’: நியூயாா்க் மேயா் வேட்பாளருக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்

நியூயாா்க் நகர மேயா் வேட்பாளரும் இந்திய வம்சாவளியுமான ஸோரான் மம்தானி, பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவதாக காங்கிரஸ், பாஜக கண்டனம் தெரிவித்தன. ஜனநாயகக் கட்சி சாா்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ம... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக் தகவல்!

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்திய கடற்படை பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை ... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து 3,400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: வெளியுறவுத் துறை!

"ஆபரேஷன் சிந்து" மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரானிலிருந்து சுமார் 3,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடை... மேலும் பார்க்க

அடுத்தக்கட்ட வர்த்தக பேச்சு! வாஷிங்டன் சென்றடைந்த இந்திய குழு!

அமெரிக்காவுடனான அடுத்த சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைக்காக, ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழுவொன்று அந்நாட்டு தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான, வர்த்தக பே... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் அதிரடி நடவடிக்கை! ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில், ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உதம்பூர் மாவட்டத்தின் பிஹாலி பகுதியில், கடந்த ஓராண்டுக்கு மேலாகத் த... மேலும் பார்க்க