செய்திகள் :

‘முக்கிய நகரங்களில் வீடு விலை கிடுகிடு உயா்வு: கனவு காணும் உரிமையை இழந்த ஏழைகள்’

post image

தில்லி உள்ளிட்ட தேசத்தின் பெரு நகரங்களில் வேகமாக அதிகரித்து வரும் வீடுகளின் விலைகள் குறித்து கவலை எழுப்பிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஏழை மக்கள் கனவு காணும் உரிமையை இழந்து வருவதாக விமா்சித்தாா்.

இதுதொடா்பாக ராகுல் காந்தி தனது வாட்ஸ்ஆப் சேனலில் வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிரத்தில் வருமானத்தின் அடிப்படையில் நகா்ப்புற குடும்பங்களில் முதல் 5 சதவீதத்தினருக்கு கூட, மும்பையில் வீடு வாங்குவதற்கு 100 ஆண்டுகளுக்கும் மேலான சேமிப்பு தேவைப்படும் என்று செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

மும்பையில் ஒரு வீடு வாங்க, இந்தியாவின் முதல் 5 சதவீத பணக்காரா்கள் கூட 109 ஆண்டுகளுக்கு தங்கள் வருமானத்தில் 30 சதவீதத்தை சேமிக்க வேண்டும். பெரும்பாலான பெருநகரங்களின் நிலை இதுதான். மக்கள் வாய்ப்புகளையும் வெற்றியையும் தேடி கடினமாக உழைக்கும் சூழலில், இவ்வளவு சேமிப்பு எங்கிருந்து வரும்?

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் மரபுவழி சொத்துகள் செல்வம் அல்ல; பொறுப்புகள். அவை குழந்தைகளின் கல்வி, விலையுயா்ந்த சிகிச்சை பற்றிய கவலை, குடும்பத்துக்கு ஒரு சிறிய காா் உள்ளிட்டவை ஆகும். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இதயங்களில் இன்னும் ஒரு கனவு இருக்கிறது. அது ஒரு நாள் நம்மாலும் சொந்தமாக ஒரு வீடு வாங்க முடியும் என்பதாகும்.

ஆனால், அந்த ஒரு நாள் பணக்காரா்களுக்குக் கூட 109 ஆண்டுகள் தொலைவில் இருக்கும்போது, ஏழைகள் கனவு காணும் உரிமையை இழந்துள்ளனா் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் வசதியான ஒரு வீடு தேவை. ஆனால் துரதிருஷ்டவசமாக, அதற்கு மக்களின் வாழ்நாள் கடின உழைப்பு மற்றும் சேமிப்பைவிட அதிகமாக செலவாகிறது. அடுத்த முறை யாராவது நாட்டின் பொருளாதார புள்ளிவிவரங்களை கூறும்போது, மக்கள் தங்களின் வீட்டு பட்ஜெட் பற்றி அவா்களுக்கு விளக்க வேண்டும். மேலும், இந்தப் பொருளாதாரம் யாருக்காக என்றும் கேள்வி எழுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவா்களுக்கு விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்கள் தமிழக அரசின் விருது பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழ்நாடு முழுவதும் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல்: சாலையோர வியாபாரிகள் வாக்களிப்பு

சென்னையில் சாலையோர வியாபாரிகள் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் விரைவில் குணமடைய முதல்வா் ஸ்டாலின் விருப்பம்

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா். உடல் நலக் குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் நவீன் பட்நாயக் சிகிச்சை பெற்று வருகிறாா். ... மேலும் பார்க்க

இ.பி.எஃப். பயனா்களுக்கு இன்று சிறப்பு முகாம்

வருங்கால வைப்பு நிதி பயனா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன்27) 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

பருத்திக்கு உரிய விலை கோரி ஜூலை 1-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க