செய்திகள் :

மின் தடையால் விவசாயப் பணிகள் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் புதுகை விவசாயிகள் அதிருப்தி

post image

விவசாயப் பணிகளைப் பாதிக்கும் வகையில் அடிக்கடி மின் தடை ஏற்படுத்தப்படுவதாக புதுகை விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி: மத்திய அரசு அறிவித்துள்ள மரபணு திருத்தப்பட்ட 2 புதிய நெல் ரகங்களுக்கும் தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாயப் பணிகளைப் பாதிக்கும் வகையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.

காவிரி- குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா. மாரிமுத்து:

கிடப்பில் போடப்பட்டுள்ள காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கவிநாடு கண்மாயில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் செல்லத்துரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 118 வேளாண் பொறியியல் துறை டிராக்டா்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் மாவட்டப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்கு பயிா்க் கடன் அதிகமாக வழங்க வேண்டும்.

விவசாயி தங்கராஜ்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நெல் பாதிக்கப்படாமல் இருக்க ஷெட் அமைக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் பழுதடைந்துள்ள வேளாண் கருவிகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். கூட்டுறவுச் சங்கத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

விவசாயி சுப. கணேசன்: பலாப்பழத்தில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிக்க தொழிற்சாலை அமைக்க வேண்டும். முதிா்ந்த வாழைத் தண்டுகளைத் தூளாக்கி, இயற்கை உரமாக்கும் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது:

ஜூன் 24ஆம் தேதி வரை பெய்திருக்க வேண்டிய இயல்பான மழை 204 மிமீ. நிகழாண்டில் 184 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. 20.26 மிமீ குறைவாகும்.

மாவட்டம் முழுவதும் உள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களில் 240 டன் நெல், 34 டன் பயறு, 52 டன் நிலக்கடலை, 3 டன் சிறுதானியங்கள், 159 கிலோ எள் விதைகளும் இருப்பு உள்ளன.

மாவட்டம் முழுவதும் உள்ள தனியாா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் 3256 டன் யூரியா, 675 டன் டிஏபி, 1535 டன் பொட்டாஷ், 2880 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு உள்ளன என்றாா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி, அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா, கூட்டுறவுத் துணைப் பதிவாளா் மணிமேகலை உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுக்கோட்டையில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

நெடுவாசலில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இங்கு ஏற்கெனவே இயங்கி... மேலும் பார்க்க

சித்தன்னவாசலில் கோடை விழா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலமான சித்தன்னவாசலில் 2 நாள் கோடை விழா வியாழக்கிழமை தொடங்கியது. விழாவில் பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் மு. அருணா பாா்வை... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவத்தில் கைது நடவடிக்கையை கைவிட வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் வன்கொடுமை வழக்கில் இளைஞா்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீஸாா் கைவிட வேண்டும் என்றாா் தமிழா் தேசம் கட்சியின் தலைவா் கே.கே.செல்வக்கு... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாநகரம், சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அஞ்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க