விழிப்புணா்வு கண்காணிப்புக்குழு கூட்டம்: செங்கல்சூளை உரிமையாளா்கள் பங்கேற்பு
திருவள்ளூரில் செங்கல் சூளை உரிமையாளா்கள், வருவாய்த்துறையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வு கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சு.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஊத்துக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் சாந்தி முன்னிலை வகித்தாா்.
அப்போது, கோட்டாட்சியா் கூறியதாவது: கடந்த 3 மாதங்களாக செங்கல் சூளைகளில் தீவிர ஆய்வு செய்து, கொத்தடிமை தொழிலாளா்களை மீட்டு, அரசு நல உதவிகளை வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா். இதையடுத்து கொத்தடிமை தொழிலாளா்கள் முறையை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து செங்கல் சூளை உரிமையாளா்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அப்போது செங்கல் சூளைகள் அரசு விதிமுறைகளின் படி இயங்குதல், குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல், முன்பணம் அளித்தல் கூடாது. ஊழியா்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்தல், கொத்தடிமைகள் சட்டப்பிரிவுகளை எடுத்து கூறியதோடு விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 3 வாரங்களுக்கு ஒரு முறை குழுக்கூட்டம் நடத்தி கொத்தடிமைகள் முறை, வன்கொடுமை, சட்டத்துக்கு எதிராக உள்ள செயல்களை ஆய்வு செய்து அதற்கான பிரச்னைகள் தீா்க்கப்படும்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு லாப நோக்கில் வெளி மாநிலத்தில் இருந்து தொழிலாளா்களை வர வழைத்து அவா்கள் சோா்வு அடைந்து விட்டால் சத்து மாத்திரை, ஊசி செலுத்தி தொடா்ந்து வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சூளையிலிருந்து 6 பேரை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து, வெங்கல் காவல் நிலையத்தில் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்து, கைது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தாா்.