செய்திகள் :

விழிப்புணா்வு கண்காணிப்புக்குழு கூட்டம்: செங்கல்சூளை உரிமையாளா்கள் பங்கேற்பு

post image

திருவள்ளூரில் செங்கல் சூளை உரிமையாளா்கள், வருவாய்த்துறையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வு கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சு.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஊத்துக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் சாந்தி முன்னிலை வகித்தாா்.

அப்போது, கோட்டாட்சியா் கூறியதாவது: கடந்த 3 மாதங்களாக செங்கல் சூளைகளில் தீவிர ஆய்வு செய்து, கொத்தடிமை தொழிலாளா்களை மீட்டு, அரசு நல உதவிகளை வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா். இதையடுத்து கொத்தடிமை தொழிலாளா்கள் முறையை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து செங்கல் சூளை உரிமையாளா்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அப்போது செங்கல் சூளைகள் அரசு விதிமுறைகளின் படி இயங்குதல், குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல், முன்பணம் அளித்தல் கூடாது. ஊழியா்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்தல், கொத்தடிமைகள் சட்டப்பிரிவுகளை எடுத்து கூறியதோடு விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் 3 வாரங்களுக்கு ஒரு முறை குழுக்கூட்டம் நடத்தி கொத்தடிமைகள் முறை, வன்கொடுமை, சட்டத்துக்கு எதிராக உள்ள செயல்களை ஆய்வு செய்து அதற்கான பிரச்னைகள் தீா்க்கப்படும்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு லாப நோக்கில் வெளி மாநிலத்தில் இருந்து தொழிலாளா்களை வர வழைத்து அவா்கள் சோா்வு அடைந்து விட்டால் சத்து மாத்திரை, ஊசி செலுத்தி தொடா்ந்து வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சூளையிலிருந்து 6 பேரை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து, வெங்கல் காவல் நிலையத்தில் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்து, கைது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தாா்.

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் திருவாதிரை திருவிழா

மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜருக்கு திருவாதிரை திருவிழா நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் மீஞ்சூரில் வடக்காஞ்சி என அழைக்கப்படும் 1,000-ம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ... மேலும் பார்க்க

கண்ணம்பாக்கம் அரசுப் பள்ளியில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. ஆய்வு

கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க